சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் நிலநடுக்கப் பிரதேசத்தில், அண்மையில், புயல் மழை பெய்து வருகிறது. சில பகுதியில், கடும் வெள்ளமும், மண் அரிப்பும் நிகழ்ந்தன. ஏறக்குறைய 18 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். 8 பேர் உயிரிழந்தனர்.
சீனத் தேசிய நாச குறைப்பு ஆணையமும், பொது துறை அணைச்சகமும், பேரிடர் நீக்குவதற்கான 4வது தேசிய நிலை உடனடி நடவடிக்கையை துவக்கியுள்ளன. நீக்கப் பணிக்கு உதவி செய்யும் வகையில், சிறப்புப் பணிக் குழு, நிலநடுக்கப் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
|