பலஸ்தீன தேசிய அதிகார நிறுவனத்தின் தலைவர் அரபாத் இன்று அதிகாலையில் மரணமடைந்ததற்கு சீன வெளிநாட்டமைச்சின் செய்தித்தொடர்பாளர் சாங் சியே அம்மையார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதைத் தெரிவித்தார்.
அவரின் மரணம் பற்றிய செய்தியை அறிந்து கொண்டு, சீன அரசு தலைவர் ஹு சிந்தாவ் ஆறுதல் செய்தியை உடனடியாக அனுப்பி, இதற்கு ஆழ்ந்த இரங்கலையும், பலஸ்தீன மக்களுக்கும் அரசு தலைவர் அரபாதின் உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவிப்பதாக சாங் சியே தெரிவித்தார்.
மத்திய கிழக்கு சமாதானத்தை வெகு விரைவில் நனவாக்குவது என்பது, அரபாத் வாழ் நாள் முழுவதும் போராடும் குறிக்கோளாகும். மத்திய கிழக்கு பிரதேசத்து மக்களின் பொது விருப்பமுமாகும். சர்வதேச சமூகத்துடன் இணைந்து, இப்பிரதேசத்தில் பன்முக நிலையான சமாதானத்தை வெகு விரைவில் நனவாக்குவதற்கு பாடுபட சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
|