இந்த அருங்காட்சியகம் செவ்வாய்கிழமை முதல் ஞாயிற்றுகிழமை வரை திறக்கப்படும். நுழைவு கட்டணம் 50 யுவானாகும். ஆனால், பழைய வானொலி பெட்டி மற்றும் திரைப்படக் கருவிகளைப் பார்க்க வரும் பார்வையாளர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதாவது இந்த அருங்காட்சியகம் மூலம் ட்சி ச்சேன்காங் எவ்வித லாபத்தையும் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி குறிப்பிடுகையில், இடைவிடாமல் முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பம் மதிப்புக்குரிய எங்கள் பழைய நினைவுகளை நீக்க முடியாது என்று ட்சி ச்சேன்காங் கூறினார். எதிர்காலத்தில் புதிய தலைமுறையினரிடம் பழைய வாழ்க்கை பதிவு பற்றிய குறிப்பிடத் தகுந்த உண்மையான மாதிரிகளை அவர்களுக்கு வழங்கி காண்பிக்க முடியும் என்று அவர் கூறினார்.