• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-02 14:07:06    
மயக்கத்தைத் தடுக்க வல்ல தண்ணீர்

cri
தண்ணீர் அருந்துவதன் மூலம் மயங்கித் தரையில் விழுவதை ஒருவர் தடுக்கலாம். உரிய அளவு தண்ணீர் குடித்தால் மூளையில் ரத்தப் பற்றாக்குறையினால் ஏற்படும் மயக்கம் தவிர்க்கப்பட முடியும். அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்பட்டாலும் நெடுநேரம் நிற்க வேண்டி நேரிட்டாலும் மூளைப் பகுதியில் ரத்தக் குறைவு நிலைமை தோன்றும். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மனிதர் மயங்கி கீழே விழ நேரிடலாம். மயக்கத்தைத் தடுப்பது பற்றி ஆராயும் வகையில் அமெரிக்காவின் வெண்டபிர்த் பல்கலைக்கழக நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். முன்பு மயக்கத்தால் அல்லல்படாத 22 தொண்டர்களை 2 பிரிவாகப் பிரித்தனர். ஏ பிரிவிலுள்ள 11 பேர் சோதனைத்துக்கு முந்திய 5 நிமிடத்தில் 473 மில்லி தண்ணீர் அருந்தினர். பி பிரிவிலுள்ள 11 பேர் தண்ணீர் குடிக்கவில்லை. தலையிலிருந்து 60 பாகை நிலையில் வைக்கப்பட்ட மரப் படுக்கையில் அவர்கள் படுக்க வைக்கப்பட்டனர். 45 நிமிடம் கழிந்த பின் அவர்களின் ரத்த அழுத்தம் வெவ்வேறான அளவில் இருப்பது தெரியவந்தது. அவர்களின் ரத்த அழுத்தம் தீர்வுக்கட்டமான நிலைக்கு கீழ்ச் செல்லும் வரை அல்லது அவர்கள் மயக்கம் அடையும் வரை சோதனை தொடர்ந்தது. மறுபுறம், சோதனை துவங்குவதற்கு முன், பி பிரிவில் இடம்பெற்றோர் தண்ணீர் குடித்தனர். ஏ பிரிவினர் தண்ணீர் குடிக்கவில்லை. தண்ணீர் குடித்தவரின் ரத்த அழுத்தம் அதிகரித்தது. மயக்கத்தைத் தாங்க வல்ல நேரம் சராசரியாக 26 விழுக்காடு அதிகமாகும் என்று சோதனையின் முடிவு தெரிவிக்கிறது. வெண்ட்பிர்த் பல்கலைக்கழக நிபுணர் வழங்கிய புள்ளிவிவரத்தின் படி, சுமார் 22 விழுக்காட்டினர் வாழ்நாளில் தலைச்சுற்றலுக்கு ஆளாகியிருக்கலாம். ஒரு சிலர் மயங்கி தரையில் விழுந்திருக்கலாம். 9 விழுக்காட்டினர் பல முறை மயக்கத்தினால் அல்லல்படடிருக்கலாம். பொதுவாக, ரத்த தானம் செய்த பின் தண்ணீர் அருந்துவது நல்லது. வெண்ட்பிர்த் பல்கலைக்கழக ஆய்வு,, சில ரத்த சேவை நிறுவன நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.