ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் போர்த்துகல் நாட்டு FC PORTO அணி, 3 கோல் போட்டு, பிரான்சின் AS MONACO அணியைத் தோற்கடித்துக் கோப்பையை வென்றது. இதுவரை விறுவிறுப்பாகவும் பரபரபாபாகவும் விளையாடி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற MONACO அணி, இறுதியில், இறுதியாட்டத்தில் எடுபடவில்லை என்பது வருத்தத்தற்குரியது.
இங்கிலாந்தில், FA கோப்பைக்கான இறுதி ஆட்ட்தில் மான்செஸ்டர் யுனைடெட் 3க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் MILLWALL அணியைத் தோற்கடித்து, கோப்பையைக் கைப்பற்றியது. பதினோராவது முறையாக, மான்செஸ்டர் புனைடெட் அணி இந்தக் கோப்பையை வென்றிருக்கிறது.
|