உலகிற்கு அளித்த உறுதிமொழியை ஏதென்ஸ் நிறைவேற்றியுள்ளது என்று ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவுக்குப் பின் 14ந் நாள் அதிகாலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக் கமிட்டித் தலைவர் ஜஸ்கராச்சி கூறினார். நாங்கள் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதன் நோக்கமானது, இந்த விளையாட்டுப் போட்டியிலிருந்து எதனை பெற நாடுவது அல்ல, வழங்க தான் விரும்புகின்றோம், நாங்கள் கிரேக்கத்தின் ஒளிமயமான பண்பாட்டை உலக மக்களுடன் இணைந்து பகிர்ந்து அனுபவிக்கின்றோம் என்று அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவும் தனிச்சிறப்பியல்பு கொண்டது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் ஒவ்வொரு நகருக்கும் தனிச்சிறப்பியல்பு உண்டு. ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, சோந்த ஊருக்குத் திரும்பியுள்ளது என்பதுதான் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தனிச்சிறப்பியல்பாகும் என்றார் அவர்.
|