• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-03 08:03:11    
சர்க்கரை நோய் தடுப்புக்கான உணவு வகைகள்

cri

சர்க்கரை நோயினால் அவதிப்படவோர் உணவு உட்கொள்வதில் எண்ணற்ற கட்டுப்பாடு உண்டு. கூடுதலாக உட்கொள்ளக் கூடாது. இனிப்பு மிகுந்த காய்கறி உண்ணக் கூடாது. சில வேளைகளில் உணவு உட்கொண்ட சற்று நேரத்தில் மீண்டும் பசி ஏற்படும். சர்க்கரை நோயாளிகள் எப்போழுதும் பசியுணர்வினால் துன்பப்படுகின்றனர். பசி நீக்கி நன்றாக உண்ணும் அதேவேளையில் உடம்பில் சர்க்கரை அளவைக் குறைக்க வல்ல உணவு வகைகளான இப்போது கூறுகின்றோம். இது உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் நம்மை தரலாம்.

கோழியிறைச்சி, பாகற் காய், வேகவைக்கப்பட்ட அவரை ஆகியவற்றை நாள்தோறும் உட்கொண்டால் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் நல்ல விளைவு காணப்படலாம். இவற்றை உட்கொள்ளும் போது தானிய உணவின் அளவை குறைக்கலாம்.

முதலில் தண்ணீரில் அவரையை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். நன்றாக வெந்த பின் அவரை வாணலியில் போட வேண்டும். பின் பாகற் காயைத் துண்டு துண்டாக நறுக்கி கோழிறைச்சியை துண்டு துண்டாக்க வேண்டும். பின் வாணலியில் சமையல் எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி ஆவற்றைப் பொறிக்க வேண்டும். நறுமனம் வீசும் போது கோழியிறைச்சித் துண்டுகளை அதில் கொட்டி சற்று நேரம் பொறிக்க வேண்டும்.

அதன் பின் பாகற் காய் துண்டுகள், வேகவைத்த அவரை ஆகியவற்றை அதில் சேர்த்து பொறிக்க வேண்டும். உப்பு, சாஸ் ஆகியவற்றை சிறிது சிறிதாக சேர்க்கலாம். கோழி வெள்ளையாகவும் பாகற் காய் பச்சை நிறமாகவும் அவரை மஞ்சள் நிறமாகவும் இணைந்த அழகான காய்கறி தயாராகின்றது. இதை உட்கொண்டால் உடம்பில் சர்க்கரை அளவு அதிகரிப்பது குறையும். நாள்தோறும் இதை உட்கொண்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை அடையலாம். நம்ப முடியநில்லை எனில் பின்பற்றிப் பாப்த்த பிறகு நல்ல விளைவு வந்தால் கிடைத்தால் எங்களுக்கு ஒரு வரி எழுதுங்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஏனைய காய்கறிகளை இப்போது அறிமுகப்படுத்துகின்றோம்.

முட்டைக் கோசு, கீளை, பூசணி காய், கத்தரிக்காய், தக்காள், ஸ்லினாச் மூஹ்கில் முளை செல்லி ஆகியவற்றில் சர்க்கரை நிறைந்த அளவு 1 முதல் 3 விழுக்காடு மட்டுமே. ஆகவே இவற்றை தாராளமாக உட்கொள்ளலாம். முள்ளங்கி இனிப்பு மிளகாய் ஆகிய காய்களில் நிறைந்த சர்க்கரையளவு 4 விழுக்காடாகும்.

உருளைக் கிழங்கில் சர்க்கரை அளவு சற்று அதிகம். அதன் விழுக்காடு 20 ஆகும். ஆகவே உருளைக் கிழங்கை உட்கொள்ளும் போது தானிய உணவு அளவை குறைக்க வேண்டும்.

முட்டைக் கோசு பற்றி சிலர் தவளான கருத்து கொண்டுள்ளனர். பல நோயாள் இதை உட்கொள்ளத் துணிவுவதில்லை. முட்டைக் கோசில் சர்க்கரையளவு 3 விழுக்காட்டுக்கும் குறைவு. ஆகவே இதை உட்கொள்ளலாம்.

கோடைகாலமும் வாத்து சூப்பும்

கடும் வெப்பம் மிகுந்த கோடைகாலம் மனிதரின் மண்ணிரால் இரைப்பை ஆகிய உடல் பகுதிகளுக்குத் தீங்கு விளைவிக்கும். வியர்வை அதிக அளவில் வெளியேறும். இதைத் தடுக்க வாத்து சூப் அருந்த வேண்டும். மனிதரின் உடல் வெப்பத்தை நீக்கும் ஆற்றல் ஏரியில் வளர்கின்ற வாத்துக்கு உண்டு. சீனாவில் பண்டைகால மூலிகை மருத்துவவியல் பதிவேட்டில் வாத்திறைச்சி உடம்புக்கு நன்மை தரும் தலைசிறந்த உணவுப் பொருட்களில் ஒன்றாகும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தாமரைக் கிழங்கு, பூசணிக் காய் முதலியவற்றைச் சேர்த்து சூப் தயாரிக்கலாம். இது சுவையாக இருக்கும். அரந்திய பின் உடம்பில் உள்ள ஈரமும் வெப்பமும் நீங்கிவிடும்.