• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-25 14:03:42    
சில விஷயங்கள் பற்றிய கருத்துக்கள்

cri
நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் வாய்ப்பை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தருவதோடு மட்டுமல்லாமல் பல நேயர்களையும் ஊக்கப்படுத்துவதாகும். புது நோயர்களை இதன் மூலம் உருவாக்க வழி வகுக்கும் என்று குருணி குளத்துப்பட்டி சொ முருகன் அண்மையில் அனுப்பிய கடிதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் சொன்னது முழுமையாக சரியானது. எங்கள் கையில் இருக்கின்ற நேயர் தொலை பேசி தகவலின் படி நேயர்களுடன் தொடர்பு கொண்டு என்ன விஷயம் பற்றி உரையாட வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவிக்கின்றோம். அடுத்த முறை குறிப்பிட நேரத்தில் அந்த நேயருடன் விபரமாக கருத்துக்களை பரிமாறி கொள்வோம். ஆகவே முதலில் நேயர்கள் எங்களுக்கு எழுதும் போது உங்கள் வீட்டுத் தொலை பேசி எண், மாவட்ட தொலை தொடர்பு எண் ஆகியவற்றை தெளிவாக அறிவிக்க வேண்டும். அல்லது ஈமேல் மூலம் எங்களுக்கு அறிவிக்க வேண்டும். இந்த நிலையில் உங்களை கூப்பிட்டு கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம். இந்த அடிப்படையில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க முடியும். இல்லை என்றால் உங்கள் கோரிக்கையை மனநிறைவு செய்ய முடியாது. நேயர்களே நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டுமாயின் கண்டிப்பாக உங்களுடன் தொடர்பு கொள்ளும் வழிமுறை தெளிவாக எங்களுக்கு அறிவிக்க வேண்டும். இல்லத்தில் தொலை பேசி வதசி இல்லை என்றால் பக்கத்து வீட்டில் தொலை பேசி எண் தெரிவிக்கலாம். ஆனால் குறிப்பு தெளிவாக குறிப்பிட வேண்டும். இந்த முறையில் நாங்கள் மேலும் கூடுதலான புதிய நேயர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இதில் முக்கிய தொடர்பு தொலை பேசி எண் எங்களுக்கு அறிவிக்க வேண்டும்.

இரண்டாவதாக தமிழ் ஒலிபரப்பு 1 மணி நேரமாக அதிகரித்த பின் வேலை சுமை கூடுதலாகிவிட்டது. முந்தைய அடிப்படையில் கடிதங்களை கையாள வேண்டிய சூழ் நிலை வேலை அதிகரிப்பு வேகத்துக்கு உகந்தாது. பணியாளர்கள் பற்றாக்குறை இருந்ததால் இப்போது கடிதங்களை கையாளும் வகையில் ஒருவர் மட்டும் நியமிக்கப்படுகிறார். நமது முயற்சி மட்டுமல்ல நேயர்களிடமிலிருந்து உதவியும் ஒத்துழைப்பும் அவசரமாக தேவைபடுகின்றன. ஆகவே இந்த வாய்ப்பில் நேயர்களுக்கு மீண்டும் பின்வருமாறு உறுதிப்படுத்துகின்றோம். அதாவது எங்களுக்கு எழுதும் போது கண்டிப்பாக முதலாவது வரிசையில் உங்கள் ஊர் பெயர் தெளிவாக எழுத வேண்டும். உங்கள் கருத்தை தேர்வு செய்யும் போது இந்த தகவல் முக்கியமானது. இப்போதைய நேயர் நேரம் நிகழ்ச்சியில் ஊர் பெயர் இல்லாத நிலைமை காணப்பட்டது. ஊர் பெயர் எழுதாதது இதில் முக்கிய காரணியாகும். இளம் பணியாளருக்கு பணி உற்சாகம் உண்டு. நேயர்கள் ஊர் பெயரை உறுதிப்படுத்தும் அனுபவம் குறைவு. ஆகவே உங்களிடமிலிருந்து உதவி பெற வேண்டும். ஊர் பெயர், கடிதம் எழுதும் தேதி, தொலை பேசி எண் முதலியவற்றை கடிதத்தின் முதல் பக்கத்தில் தெளிவாக எழுத வேண்டும்.