
த.செல்வன்.... வணக்கம் நேயர்களே நமது ஐம்புலன்களில் காது மிக முக்கியமானது. ஆனால் காதுப் பராமரிப்பு பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை. இன்றைய அறிவியல் அரங்கம் நிகழச்சியில் காதுப் பராமரிப்பு பற்றி மருத்துவருடன் ஒரு பேட்டி ஒலிபரப்பாகின்றது. மருத்துவர் என். ஐவகர் அளித்த பேட்டியை நமக்கு அனுப்பியுள்ளார். மதுரை செல்லூர் நேயர் என். சீனிவாசன் காது பற்றி கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க!நிகழ்ச்சி வழங்குபவர்கள் ராஜாராம். தி கலையரசி
கலையரசி....பொதுவாக காதில் என்ன மாதிரியான பிரச்சினைகள் தோன்ற வாய்ப்பு உள்ளது?
ராஜாம்.....பிறவி காது கேளாமை, காதில் சீழ் வருவது, காதில் வலி, கேட்டுக்கொண்டிருந்த காது தனது பணிக்கு முர்றுப் புள்ளி வைப்பது போன்ற பாதிப்பு காதில் வரலாம். காதை ஒரு அற்புதமாக நுணுக்கமான வகையில் இயற்கை படைத்துள்ளது. காதினை வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று 3 பிரிவுகளாக பிரிக்கலாம். இந்த இடத்தில் மிக முக்கியமான ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். உடம்பிற்கு கண் அவசியமானது தான். ஆனால் மனிதர்கள் கண்ணிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவேணும் கூட காதிற்கு கொடுப்பதில்லை.

கலையரசி....காதில் சீழ் பாதிப்பு வருவதற்கு என்ன காரணம்? அதற்கு என்ன சிகிச்சை?
ராஜாம்....சிறுவயதில் ஏற்பட்ட கிருமி தொர்றினை கண்டு கொள்ளாமல் இருப்பது நாளடைவில் முற்றிப் போய் காதில் சீழ் மாறலாம். காதுப் பகுதியில் அடிபட்டாலும் காதில் சீன வைக்கலாம். இளம் பிராயத்தில் வருகின்ற காது வலியை அலட்சியப் படுத்துவதனாலும் காதில் சீழ் வைக்கலாம். மூக்கில் கிருமி தொற்றி அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டால் அது பின்னாளில் காதில் சீழாக மாறலாம். காதிற்கும் மூக்கிற்கும் இடையே ஈஸ்டீஸின் குழாய் ஒன்று உள்ளது. அதன் மூலம் மூக்கடைப்பு மற்றும் கிருமி தொற்று காதிற்கு பரவி காதில் சீழ் தோன்றி விடலாம்.
காதில் சிலருக்கு எலும்பு அரிப்பு நோய் வரலாம். இதனாலும் காதில் சீழ் ஏற்படலம். எலும்பு அரிப்பு மூளைக்கும் கூட பரவிட வாய்ப்பு உள்ளது. இப்படி பரவியவர்கள் தலைவலி, காதுவலி, காதில் சீழ் என்று வருவார்கள். எனவேதான் நேரடியான சிகிச்சை செய்யாமல் சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

கலை.........பிறவியிலேயே காது கேட்காமல் போவதற்கு என்ன காரணம்? இதனை சரி செய்து மீண்டும் காதை கேட்க வைக்க இயலுமா?
ராஜாம்...பல காரணங்கள் இதற்கு உண்டு. அவற்றில் மிக முக்கியமானது சொந்தத்தில் திருமணம் முடிப்பதாகும். மரபணுக் குறைபாடு காரணமாக பிறவி காதுகேளாமை ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் வேண்டாத மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதன் காரணமாகக் கூட இப்படி குழந்தை பிறக்கலாம். சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் இருக்கும். அந்த மாதிரியான குழந்தைகளுக்கு உடனடியாக சிறப்பு சிகிச்சை பராமரிப்பு தேவைப்படும். இதை செய்யத் தவறினாலும் பிறவி காது கேளாமை நிகழலாம்.
|