• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-31 08:45:03    
பசி வந்தால் பத்தும் பறக்குமா?

cri
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்கள். பத்தும் பறக்கிறதோ இல்லையோ சுத்தம் மறந்து விடுகின்றது. பசி வந்து விட்டால் கண்டது கடியதை வாங்கித் தின்கிறோம். வெந்ததையும் வேகாததையும் வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டு வயிற்றைப் பிசைந்து கொண்டு தவிக்கிறோம்.

ஆண்டு தோறும் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் நச்சுத் தன்மை வாய்ந்த நுண்ணுயிரிகள் தொற்றியதால் கெட்டுப் போன உணவை உண்டு இறக்கிறார்கள் அல்லது நோய்வாய்ப் படுகின்றனர். ஆசிய பசிபிக் பகுதியில் மட்டும் உணவால் அல்லது தண்ணீரால் பரவும் நோய்களுக்கு 7 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் பலியாவதாகவும் மேலும் பலர் உடல் நலம் கெடுவதாகவும் உலக சுகாதார அமைப்பு அண்மையில் மதிப்பிட்டது.

இப்படிப்பட்ட பீதியூட்டும் நிலைமையில் பிரிட்டனைச் சேர்ந்த எட்டு உணவுப் பாதுகாப்பு நிபுணர்கள் அண்மையில் பெய்ஜிங்கில் கூடி இவ்வளவு பெரிய நோய்ச் சுமையை எவ்வாறு இறக்கி வைப்பது என்பது பற்றி சீன நிபுணர்களுடன் கலந்தாலோசித்தனர். நோய்க் கிருமிகள் மனித உடம்புக்குள் நுழைவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. ருசிக்கு அடிமையாகிப் போன நமது மனதுக்குக் கட்டுப்பட மறுக்கும் நாக்கு இந்த வாய்ப்பை தட்டில் வைத்து வழங்குகின்றது. நச்சுத் தன்மை வாய்ந்த நுண்ணுயிரிகளால் பொதுவாக ஏற்படக் கூடிய ஒரு நோய் வயிற்றுப் போக்கு இந்த நுண்ணுயிரிகள் கோழிகளை மிகவும் நேசிக்கின்றன. எனவே கோழிப் பண்ணைகளுக்கு அருகில் விளையும் காய்கறிகளில் கூட இவை தொற்றுகின்றன. மேலும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் போதும் சேமித்து வைப்பதிலும் பக்குவப்படுத்துவதிலும் மாசுபட வாய்ப்புக்கள் உண்டு.

மேலும் கண்ணைக் கவரும் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு பாஃஸ்ட் புஃட் அங்காடிகளை நோக்கி கால்கள் விரைகின்றன. சமைக்க எளிது சுவைக்க இனிது என்ற அடிப்படையில் பிரபலமாகி விட்ட சிறுதீனிகளில் மாசுபடும் அபாயம் அதிகம் உள்ளதாக பிரிட்டனின் உணவுப் பாதுகாப்பு அறிவியல் அறிஞர் பேராசிரியர் மைக் பெக் கூறுகின்றார். காரணம் இந்த வகை விரைவு உணவுகள் பொதுவாக 10 நிமிடங்களுக்கு மட்டுமே 90 டிகிரி வெப்பத்தில் சூடாக்கப்படுகின்றன. பராமரிப்பு பொருள் எதுவும் சேர்க்கப்படுவது இல்லை. குளிர்பதன பெட்டியிலேயே வைத்திருந்தால் தான் பாதுகாப்பு.

உணவுப் பொருட்களில் பாக்டீரியா நுண்ணுயிரிகள் தொற்றாமில் தடுக்க என்ன வழி என்று ஆராய்ந்த அறிவியல் அறிஞர்கள் டி என் ஏ நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். சல்மோனெல்லா எணப்படும் உணவில் நச்சூட்டும் நுண்ணுயிரியின் திறன்கள் முழுவதையும் வெளிப்படுத்திட டி என் ஏ நுண்வரிசைகள் அல்லது உயிரிச் சில்லுகள் உலகெங்கும் ஆராய்ச்சிக் கூடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உயிரிச் சில்லுகள் உணவுப் பொருட்களுக்குள் நோய்க் கிருமிகள் தொற்றும் அபாயத்தை பெரிதும் குறைக்க முடியும் என்று பீகிங் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் உள்ள சல்மோனெல்லா நிபுணர் லியு ஷுலின் கூறுகிறார். எனினும் இந்த நுட்பம் இது வரையிலும் உணவுத் தயாரிப்புத் தொழிலில் பயன்படுத்தப்பட விலிலை.

உணவு மூலம் பரவும் நோய்கள் பல வடிவங்களில் பல அளவுகளில் வருகின்றன. இவற்றில் குடல் செல்களைத் தாக்கக் கூடியவை சலமோனெஎல்லா மற்றும் ஷிகெல்லா என்ற கிருமிகள். இவற்றின் மரபணுக்களை வரிசைப்படுத்துவதன் மூலம் தடுப்பூசி மருந்து கண்டு பிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தற்போது ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகள் மூலம் இந்த நுண்ணுயிரி நச்சு கட்டுப்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்த நச்சுத் தன்மை வாய்ந்த நுண்ணுயிரிகளோ எந்த ஒரு மருந்தையும் வந்துபார் என்று சவால்விடும் அளவுக்கு வீரியம் பெற்றுவிட்டன. எனவே ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளுக்குப் பதிலாக வேறு மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. எனவே இப்போது பாக்டீரியா பேஜ் லைஸின்ஸ் என்ற ஒரு புதுவழி காணப்படுகின்றது. பாக்டீரியா என்ற நுண்ணுயிரியில் தொற்றும் நோய்க் கிருமிகளை பாக்டீரியா பேஜஸ் என்கிறார்கள். இந்த ஒரு கிருமி பாக்டீரியா செல்லுக்குள் நுழைந்து விட்டாலே போதும். பல்கிப்பெருகி ஒரு நொதிமத்தை அதாவது என்ஸைமை உருவாக்குகின்றது. இந்த நொதிமம் செல்சுவரை உடைத்துக் கொண்டு காட்டாற்று வெள்ளம் போல் பல செல்களுக்கும் பரவுகின்றது.இந்த நொதிமம்தான் லைஸின் எனப்படுகின்றது. இந்த நொதிமத்தை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டு பிடிக்கக் கூடிய அல்லது கொல்லக் கூடிய ஆராய்ச்சியில் பிரிட்டனின் உணவு ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி மைக் கேஸன் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது. ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பரந்த அளவில் செயல்படக் கூடியவை இந்த புதிய நுட்பமோ துல்லியமாக குறிப்பிட்ட நுண்ணுயிரியை மட்டும் கொன்று விட்டு மற்ற நுண்ணுயிரிகளை அப்படியே விட்டுவைக்கின்றன.

இந்த அறிவியல் ஆராய்ச்சிகள் எல்லாம் ஒரு புறம் நடக்கட்டும். இவை வந்த பின் தடுப்பதற்கானவை. நாம் வருமுன் தவிர்ப்பதைப் பார்ப்போம். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் சரிதான். ஆனால் சுத்தம் மறந்து போகவேண்டாமே. என்னதான் அகோரப்பசி எடுத்தாலும் கைகால்களை சுத்தமாக சோப்பு போட்டு கழுவியபின்னர், சாப்பிட்டால் நல்லது தானே. அதனால் தான் முன்பெல்லாம், கிராமத்தில் வீடுகளில் நுழைந்த உடனே கை கால் கழுவ செம்பு நிறைய தண்ணீர் கோடுப்பார்கள். அது சரி, பசி வந்தால் பத்தும் பறப்பதில்லை. பதினொன்றும் பறப்பதில்லை, பற்றும் பறந்து போகும் என்பது தான் சரியான பழமொழி அதாவது பசி வந்து விட்டால் பந்தபாசம் பற்று எல்லாம் மறக்கும் பரவாயில்லை. சொந்தத்தை மறக்கலாம். சுத்தத்தை மறக்காதீர்கள்.