 முதியவர்கள் இரவில் ஒரு கோப்பை தண்ணீர் குடித்தால் ரத்த நானத்தில் அடைப்பு ஏற்படுவதைக் குறைக்கலாம். இதய நோய் நிகழும் ஆபத்தை தடுக்கலாம். அதேவேளையில் ரத்த அழுத்த நோயையும் தடுக்கலாம். ஜப்பானின் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி மூலம் இதைக் கண்டறிந்துள்ளனர். ஆகவே முதியோர் மட்டுமல்ல சாதாரண மக்களும் இதை வாழ்க்கையில் நின்பற்றலாம். இரவில் பொதுவாக உடலின் இயக்கம் நின்ற பின் ரத்த ஓட்ட வேகம் அமைதியாகின்றது. ரத்தத்தில் அடைப்பு அதிகமாக இருந்தால் இதய நோய், பக்க வாதம் போன்ற நோய்கள் அதிகம் நிகழும். ஆகவே நமது வாழ்க்கையில் தினந்தோறும் 800 கிராம் தண்ணீரை குடித்தால் உடம்புக்கு நன்மை தரும். குறிப்பாக இரவில் ஒரு கோப்பை தண்ணீர் குடித்தால் நோய் வருவதைத் தடுக்கலாம். நண்பர்களே இதை தங்கள் வாழ்க்கையில் ஒரு படிப்பினையாக மனதில் வைக்கலாம்.

ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு துணை புரியும் பாசிப்பயறு மாவு
ரத்த அழுத்த நோயினால் அல்லல்படுவோர் நாள்தோறும் அரைக்கப்பட்ட 15 கிராம் பாசிப்பயறு மாவை வென்னீரில் கரைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தொடர்ச்சியாக 3 மாதங்கள் குடித்து வந்தால் லேசான ரத்த அழுத்த நோயாளியின் நோய் நிலைமை குறையும். அதிக ரத்த அழுத்த நோயினால் அல்லல்படுவோர் தொடர்ச்சியாக இன்னொரு 3 மாதங்களுக்கு பாசிப்பயறு மாவை பச்சையாக வென்னீருடன் கலந்து குடிக்க வேண்டும். இதனால் உடம்புக்கு பக்க விளைவு எதுவும் வராது. தினந்தோறும் தொடர்ச்சியாக குடிக்க வேண்டும். ஒரு நாள் கூட நிறுத்தக் கூடாது. ரத்த அழுத்த நோய்க்குள்ளானவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாமா? உங்கள் விருப்பப்படி செயல்படலாம். உங்கள் உடம்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு இதை சோதனை முறையில் பயன்படுத்திப் பார்க்கலாம்.

மூக்கு அழற்சியைப் போக்கும் குளிர் தண்ணீர்
குளிர் தண்ணீர் மூக்கு அழற்சிக்கு சிகிச்சையளிக்கக் கூடிய திருப்தி தரும் வழி முறையாகும். இதைச் செயல்படுத்தலாம். முதலில் துணி அல்லது கையை குளிர் தண்ணீரில் நனைத்து மூக்கு மேல் வைக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். பின் முகத்தை குளிர்ச்சியான தண்ணீரில் முங்கும் படி வைக்க வேண்டும். அப்போது காதுகளுக்குள் தண்னீர் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீருக்குள் மூக்கு மூலம் காற்றை வெளியே விட்டு சுவாசிக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுக்கும் போது தலையை தூக்கிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பல தடவை இப்படியே செயல்பட வேண்டும். தண்ணீரில் மூச்சு விடும் போது மூக்கைச் சுற்றி தண்ணீர் அலை மோதும். இப்படிப்பட்ட நிலையில் மூக்கு தண்ணீருடன் மோதி கழுவப்பட்ட பின் இரண்டு விரல்களால் மூக்கு பகுதியை பிடித்து மற்ற விரல்களால் லேசாகத் தடவ வேண்டும். ஒரு வேளையில் தொடர்ந்து 30 முறை இப்படியே தடவிவிட வேண்டும். கடைசியில் முகத்தைக் கழுவலாம். இப்படி செய்தால் மூக்கு அழற்சி நீங்கிவிடும்.
|