• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-23 15:19:56    
எய்ட்ஸ் தடுப்பு தூதர் முயற்சி

cri
ஆப்பிரிக்காவில் ஆண்டு தோறும் சுமார் 20 லட்சம் மக்கள் எய்ட்ஸ் நோய்க்கு பலியாகின்றனர். மருத்துவமனையில் இந்நோய்க்காக சிகிச்சை பெறுகின்ற நோயாளிகள் படுக்கைப் பற்றாக்குறை காரணமாக இரண்டு அல்லது மூன்று பேர் ஒரு படுக்கையை பயன்படுகின்றனர். சில நோயாளிகள் தரையில் படுர்கின்றனநர். ஒவ்வொரு நஸூம் 80 முதல் 90 படுக்கைகளுக்கு பொறுப்பேற்கின்றார். குழந்கை நோயாளியறையில் தாய்மார்களின் எய்ட்ஸ் கிருமி நேரடியாக பச்சிங் குழந்தைகளைத் தொற்றியது. காரணம் 4 அமெரிக்க டாலர் கொடுத்து தேவைப்படும் தடுப்பு மருந்து வாங்காமல் இருப்பதாகும். இந்த நிலைமையை கண்டு ஆப்பிரிக்காவுக்கான ஐ.நா எய்ட்ஸ் தடுப்புத் தூதர் ஸ்டீபன லூயி வேதனையடைந்தார். உயிரைக் கொல்லும் எய்ட்ஸ் நோயை ஒரு நாள்பட்ட நோயாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார். அவருடைய கூற்றை கேட்டதும் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சிவசப்படனர். 2001ம் ஆண்டு எய்ட்ஸ் தடுப்பு தூதராக பணி புரிந்த பின் 60 வயதுக்கு மேற்பட்ட அவர் இந்த கனவுக்காக அயராது உழைத்து வருகின்றார். அவருடைய கண்களில் ஆப்பிரிக்காவுக்கான ஐ.நா எய்ட்ஸ் தடுப்பு தூதரின் அம்சம் ஒளிர்கின்றது. இந்தப் பணிக்கு விவேகம் மிகவும் தேவைப்படும், அயரா உழைப்பாற்றலும் தேவை. கடுமையான மோசமான பணி சூழ்நிலையில் அவருடைய 10 விரல்களின் நகங்களில் கிருமி தொற்றது. ஒவ்வொரு நாளும் பணி புரிவதற்கு முன் விரல்களில் அவர் பாதுகாப்பு கவசத்தை ஒட்ட வேண்டியுள்ளது. வசதிகள் இல்லாத போதும் 20 முறை அவர் எய்ட்ஸ் தடுப்பு பற்றி சொற்பொழிவு நிகழ்த்துகின்றார். எய்ட்ஸ் நோய் குணப்படுத்த முடியாதது என்பதை சரியான முறையில் மக்கள் அறிந்து கொள்ள செய்து வருகின்றார். வாரத்துக்கு அவர் 7 நாட்கள் வேலை செய்கிறார். நாளுக்கு 17 19 மணி நேரம் வேலையில் ஈடுபடுகின்றார். திரைப்படம், தொலை காட்சி ஆகியவை அவரை பொருத்தவரை ஆடம்பர வாழ்க்கையாகும். ஆப்பிரிக்காவில் பணிபுரிந்த 4 ஆண்டுகளில் லூயிஸ் தனது கையில் மரணமடைகின்ற நோயாளிகளுக்கு ஆறுதல் வழங்கினார். பல நூறு அநாதை எய்ட்ஸ் குழந்தைகளை தழுவிக் கொண்டார். 73 வயதான ஆப்பிரிக்க மூதாட்டியுடன் அவர் ஆடினார். இந்த மூதாட்டி எய்ட்ஸ் நோய்வாய்பட்டு மரணமடைந்த தமது குழந்தைகளை புதைத்தார். இப்போது 13 பேரக் குழந்தைகளை அவர் வளர்க்கின்றார். சர்வதேச சமூகம் அவசர நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்தால் 2010ம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் 2 கோடி எய்ட்ஸ் குழந்தைகள் உருவாகிவிடுவார்கள். இது பற்றி லூயி மிகவும் கவலைப்படுகின்றார். லூயி எனும் நிதியத்தை அவர் நிறுவினார். மரணமடைகின்ற பெண் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சமூக நிலையில் இலவச அன்பு காட்டி வாழ்க்கையின் கடைசி சில வாரங்களில் துன்பத்தை தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு உதவியளித்து அவர்களின் பெருமையை பாதுகாப்பது, அநாதை எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் மற்ற கிருமி தொற்றிய குழந்தைகளுக்கும் கூடியளவில் உதவி வழங்கி அவர்கள் கல்வியும் உணவு பொருட்களும் பெறச் செய்வது, பரஸ்பரம் தொடர்பு கொள்வதிலும் மற்றவருடன் தொடர்பு கொள்வதிலும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவளித்து மேலும் கூடுதலான வசிப்பிட மக்களிடையே எய்ட்ஸ் நோய் தடுப்பு தகவலை பிரச்சாரம் செய்வது என்பன இந்நிதியத்தின் முக்கிய வேலைகளாகும். தவிர சிறிய தொகை நிதியத்தை அவர் நிறுவி இதில் பங்கு ஆற்றியுள்ளார். அவருடைய உதவியுடன் இந்த நிதியத்திற்கு இதுவரை 30 லட்சம் அமெரிக்க டாலர் நன்கொடையாக கிடைத்துள்ளது. அதிகம் தொகை இல்லை. ஆனால் மனிதரின் உண்மையான உணர்வு இதில் நிறைந்துள்ளது. ஒரு சோபும், ஒரு துவாலை, ஒரு துணி ஆகியவை தாமதமின்றி நோயாளிகளுக்கு வழங்கப்பட்டால் அவற்றின் பயன்பாடு மதிப்பிடப்பட முடியாதது என்று லூயி கருதுகிறார்.