• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-04 10:15:10    
சீன பண்பாடு நிகழ்ச்சி பற்றிய சில ஆலோசனைகள்

cri
-சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் இறந்தவர்களுக்குச் செய்யப்படும் இறுதிச் சடந்கு என்ற கட்டுரை பற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்து கொல்ள விரும்புகின்றேன். இந்நிகழ்ச்சியில் இழவுப் பரிவாரங்கள் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தினார். திரு ராஜாராம், ஏதோ இது ஒரு முக்கியப் பொருளை உணர்த்துகிற வார்த்தையாக இருக்க வேண்டும். ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தை சரியான மொழியாக்க வார்த்தை அல்ல எனக் கருதுகின்றேன். இழவுப் பரிவாரங்கள் என்ற வார்த்தையின் பொருளை என்னால் புரிந்து கொள்ள முடியாததால் கட்டுரையை என்னால் மனநிறைவுடன் கேட்க முடியவில்லை. இதே நிகழ்ச்சியைப் பாராட்டி சேந்தமங்கலம் எஸ் எம் ரவிச் சந்திரனும் எழுதியுள்ளார். அவர் கூறுகிறார். ஈமச்சடங்கு ஊர்வலத்தில் காகிதத்தால் செய்யப்பட்ட குதிரைகள், மணித உருவங்கள் குமான்றவற்றை சீன மக்கள் எடுத்துச் சென்று எரிப்பார்கள் என்ற தகவல் அற்புதமானது. பழங்காலத்தில் மன்னர்கல் இறந்து விட்டால் புதைக்கும் போது மண்ணால் செய்த வீரர்களின் விலைகளும் புதைக்கப்பட்டதாக அறிந்தேன். இந்தச் செய்திகல் விந்தையாகவும் வியப்பாகவும் உள்ளன. அதே போல மே 6ம் தேதி ஒலிபரப்பான நிகழ்ச்சியில் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தகம் பற்றிய தகவலும் கேட்க சுவையாக இருந்தது. வி-------நேயர்களின் பாராட்டுக்கு நன்றி. சீனாவுக்கு வரும் நேயர்கள் சி ஆண் நகரில் இந்த மண் மொம்மை வீரர்களின் சிலைகளை கண்டுகளிக்கலாம். ராஜா. செல்வம் அவர்கள் கூறிய கருத்து பற்றி என்ன சொல்கிறீர்கள் ரா--------இழவுப் பரிவாரம் என்ற சொல்லில் தவறு ஏதும் இல்லை என்றே நான் கருதுகிறேன். மிகவும் கிந்தித்து, சீர்தூக்கிப்பார்த்த பின்னரே அந்த வார்த்தையை உன்ளுணர்வின் அடிப்படையில் பயன்படுத்தினேன். செல்வம் அவர்களின் கடிதம் வந்ததும் அகராதியைப் புரட்டினேன். சிரியா பதிப்பகம் வெளியிட்டுல்ள தமிழ்ச் சொல் அகராதியில் பரிவாரம் என்பதற்கு உடன் வருகிறவர்கள் என்ற பொருள் தரப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் இறந்தவரின் ஆகியுடன் இந்த காதிதக்குதிரைகளும் ஏவலர்களும் வண்டிகளும் உடன் செல்கின்றன என்று பொருள் கொள்ளலாம். செல்வம் அவர்களே. இது போன்ற உரத்த சிந்தனை மூலம் மற்ற நேயர்களும் பல தகவல்களை தெரித்து கொள்ள முடியும் என்பதால் கருத்துக்களையும் கண்டனங்களையும் வரவேற்கிறோம். நன்றி. அப்புறம் சுனாமி பற்றஇ இலங்கை நேயர் பாத்திமா அனுப்பிய கவிதை மனனத வலிக்கச் செய்தது அவருக்கும் அவருடைய குடும்பத்தார்க்கும் ஆறுதல் தெரிவிக்கிறேன் என்று செல்வம் குறிப்பிட்டுள்ளார். வி---------பாராட்டுக்குளுக்கும், ராஜா சொனன விளக்கத்துக்கும் நன்றி.