தன்னாட்சி பிரதேச மக்கள் பேரவையின் 40 ஆண்டுகள்
cri
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் மக்கள் பேரவை நிறுவப்பட்டதன் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அங்குள்ள பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த 100க்கும் அதிகமானோர் தலைநகரான லாசாவில் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் உரைநிகழ்த்திய தன்னாட்சி பிரதேசத்தின் கட்சி செயலாளர் யான் சுவான் தாங் மக்கள் பேரவை அமைப்பு முறை திபெதில் நிறுவப்பட்ட பின்னர் திபெத் மக்களில் 95 விழுக்காடைர உள்ள வேளாண் அடிமைகள் நிலப்பிரபுக்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக கூறினார். கடந்த 40 ஆண்டுகளில் திபெத் மக்கள், மக்கள் பேரவை அமைப்பு முறை மற்றும் தேசிய தன்னாட்சி அமைப்பு முறை மூலம் நாட்டு நிர்வாகத்தில் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.
|
|