கடந்த 40 ஆண்டுகளில் திபெத்தின் மாற்றம்
cri
 கடந்த 40 ஆண்டுகளில் திபெத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் மாபெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்று திபெத்தில் வாழும் பல்வேறு பிரிவு மக்கள் கூறுகின்றனர்.
நேற்று நடைபெற்ற ஒரு கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அவர்கள், திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்ட கடந்த 40 ஆண்டுகளில், வரலாற்று காணாத வேகமான வளர்ச்சியை திபெத் அடைந்து வருகின்றது என்று கூறினர். இந்த 40 ஆண்டுகள், மாபெரும் முன்னேற்றத்தின் மூலம், மக்களுக்கு மனநிறைவு தந்த காலகட்டமாகும். இந்தக் காலத்தில் திபெத்தில் தன்னாட்சி அமைப்புமுறை நடைமுறைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர்கள் கூறினர். மத்திய அரசின் சிறப்பு கவனத்துடனும், நாட்டு மக்களின் பெரிய உதவியுடனும் திபெத்தின் பொருளாதார வளர்ச்சி உலகில் ஏற்கப்படும் அற்புதத்தை பெற்றுள்ளது. சமூக நிலைமையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.
திபெத்தில் மொத்த உற்பத்தி கடந்த 4 ஆண்டுகளாக 12.5 விழுக்காடு என்ற வளர்ச்சியை நிலைநிறுத்தியுள்ளது என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்து நிரந்தர கமிட்டி தலைவர் ரேசர் கூறினார்.
|
|