பெய்சிங் நேரம் ஆக்டோபர் முதல் நாள் நண்பகல் 12. 45 மணிக்கு கடல் மட்டத்திலிருந்து ஊக்கம் தரும் ஒரு தகவல் வந்தது. சீன நேபாள கூட்டு மலை ஏற்ற குழுவின் 11 உறுப்பினர்கள் "சீன-நேபாள நட்புறவு சிகரத்தில்"வெற்றிகரமாக ஏறினர் என்று இத்தகவல் கூறுகின்றது. இந்த தகவல் பெய்சிங் வந்ததும், சீன வெளியுறவு அமைச்சர் லீ சௌ சிங், சீன அரசு தலைமை விளையாட்டு நிர்வாகம், சீன மலையேற்ற சங்கம் ஆகியவை சீன-நேபாள கூட்டு மலையேற்ற குழுவுக்கு தனித்தனியாக வாழ்த்து செய்திகளை அனுப்பி, அவர்களுக்கு வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்தனர்.
அக்டோபர் முதல் நாள் நண்பகல் 12.45 மணிக்கு முதல் தொகுதியாக சிகத்தில் ஏற்ற 8 வீரர்களில், சீனாவைச் சேர்ந்த அவாங் சாசி, சுன் பின், ச்சுரென் சங்ச்சு, ஜிமிசாசி, ச்சுரேன் சுன்ச்சு ஆகிய 5 பேரும், நேபாளத்தின் பியன்பா, நிமா, லன்பாபு ஆகியோரும் இடம்பெறுகின்றனர். 12.56 மணிக்கு சீனாவின் லோ சேவும், நேபாளத்தின் சாசி மற்றும் லகோபாவும் 6591 மீட்டர் உயரமுடைய சிகரத்தில் வெற்றிகரமாக ஏறினர். இவ்வாறு, மொத்தம் 11 வீரர்கள் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறினர். அவர்கள் சீன மற்றும் நேபான தேசிய கோடிகளை சிகரத்தில் நிறுத்தி, பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர்.
மலை ஏறியுள்ள வீரர்கள் வழங்கிய தகவலின் படி, அவர் சிகரத்தில் அளவிட்ட உண்மை உயரம் 6591 மீட்டராகும். இதற்கும், முன்கூட்டியே அளவிட்ட 6592 மீட்டர் என்பதற்கும் ஒரு மீட்டர் மட்டும் வித்தியாசம் தான் என்று தெரிகின்றது. அக்டோபர் 2ஆம் நாள் 12.38 மணிக்கு இரண்டாம் தொகுதியாக சீனாவின் 8 வீரர்களும் நேபாளத்தின் 5 வீரர்களும் வெற்றிகரமாக மலை சிகரத்தில் வெற்றிகரமாக ஏறினர். தற்போது, சீன-நேபான மலை ஏற்றக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் சிறந்த நிலையில் இருக்கிறார்கள். காயமும் நோய்யும் ஏதுவும் இல்லை. அவர்கள் 3 ஆம் நாள் லோ திங் ழி மாவட்ட நகரத்துக்கு விலகினர் 5 ஆம் நாள் லாசாவை திரும்பி அடைந்தனர்.
இத்துடன் சீன-நேபாள நட்புறவு கூட்டு மலையேற்ற நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்தது. சீன-நேபாள மலையேற்ற வீரர்கள் கூட்டாக மலையேறும் நட்புப்பூர்வமான கடமையை நிறைவேற்றனர்.
|