
உலகளவில் கடல் மட்டத்தில் மிகவும் உயர்மான மிகவும் நீளமான சீனாவின் சிங்ஹேய்-திபெத் இருப்புப்பாதை இன்று முழுமையாக கட்டப்பட்டுள்ளது. திபெத்தில், இருப்புப்பாதை இல்லாத வரலாறு முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு, சீன அரசு தலைவர் ஹுசிந்தாவு வாழ்த்துச்செய்தியை அனுப்பினார்.
லாசாவில் நடைபெற்ற கொண்டாட விழாவில் உரை நிகழ்த்திய சீன துணை தலைமையமைச்சர் ஹுவாங் ஜு, இந்த இருப்புப்பாதையின் கட்டுமானம், திபெத் இன தன்னாட்சி பிரதேசம் மற்றும் சிங்ஹேய் மாநிலத்தின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கும் மேற்கு பகுதி வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
சிங்ஹேய்-திபெத் இருப்புப்பாதை, சிங்ஹேய் மாநிலத்தின் தலைநகர் சினிங்கிலிருந்து திபெத் இனத்தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் லாசா வரை செல்கிறது. அதன் மொத்தம் நீளம், 1900 கிலோமீட்டர் ஆகும்.
|