நான்காவது கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்றிரவு சீனாவின் மகௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் துவங்கியது. சீனத் துணைத் தலைமை அமைச்சர் வூ யீ அம்மையார் இந்த விளையாட்டுப் போட்டிகள் துவங்குவதாக அதில் அறிவித்தார்.
இந்த விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 17 விளையாட்டுகள் நடைபெறும். அவற்றில் 11 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுகின்றன. 9 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3000 ஆயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துகொள்கிறார்கள். அனைத்து போட்டிகளும் நவம்பர் 6ஆம் நாள் நிறைவடையும்.
இந்த முறை சீனா மாபெரும் விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவை அனுப்பியுள்ளது. மொத்தம் 394 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 16 விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிடுவர். சிறந்த விளையாட்டு சாதனைகளை பெற்று, 2008 ஆம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக விளையாட்டு அணியை வளர்ப்பது சீன அணி இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதன் நோக்கமாகும்.
|