அனாதை குழந்தைகளைப் பராமரிப்பதில் சீனாவின் Henan மாநிலத்தின் Zheng Zhou நகரம் 2010ஆம் ஆண்டு வரை ஐ.நா. குழந்தைகள் நல நிதியத்துடன் மீண்டும் ஒத்துழைக்க உள்ளது. ஐ.நா. அமைப்புடன் தொடர்ந்து இரு முறை ஒத்துழைக்கும் சீனாவின் முதலாவது நகரமாக இது மாறியுள்ளது. இதற்கு முன்பு, 2001 முதல் 2005 வரை ஐந்தாண்டுகளுக்கு ஒத்துழைத்தது. இப்போது இந்நகரத்தில், முழு நாள் அனாதை குழந்தைகள் பராமரிப்பு மையங்களும், துவக்கப் பள்ளிகளும் கட்டப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் அதிகமான அனாதைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அடுத்த ஐந்தாண்டுகளில், இக்குழந்தைகளை வன்செயலுக்கு உள்ளாகாமல் தடுப்பதும், அவர்களை எய்ட்ஸ் நோய் தொற்றாமல் பாதுகாப்பதும் இந்த ஒத்துழைப்பின் முக்கிய அம்சமாக இருக்கும்.
|