• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-11 17:09:30    
அண்மையில் கிடைத்த மின்னஞ்சல்

cri
பேளுக்குறிச்சி க செந்தில் அறிவியல் அணுக்குகளில் ஆண்களுக்கு மார்பகப்புற்று நோய் வரும் என்ற தகவல் அதிர்ச்சி தந்தது என்கிறார். அறிவியல் உலகம் நிகழ்ச்சியைக் கேட்கத் தவறுவது இல்லை என்று கூறுகிறார். வளவனூர் புதூர் எஸ் ராமபத்ரன் தமிழில் மின்னஞ்சல் அனுப்ப தமக்கு செல்வம் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறார். 1988இல் சீன வானொலியுடன் தமக்கு ஏற்பட்ட தொடர்பு நடுவில் தொய்ந்த போதிலும் தொடர்கிறது என்கிறார். வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் தமது மின்னஞ்சல்களில் டிசம்பர் 7ம் நாள் நட்புப் பாலம் நிகழ்ச்சியில் சாரதா அம்மையாரின் பேட்டி முடிந்தது. இது தொடர்ந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் எழுந்தது என்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் பல பழைய நேயர்கள் சொந்தப் பிரச்சினைகளைல் கற்போது கடிதம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டனர். அவர்களை சந்தித்து மீண்டும் கடிதம் எழுதத் தூண்டுகிறோம் என்கிறார். பொன் ஏழிசை வல்லபி தமது மின்னஞ்சலில் டிசம்பர் 10 சீனத் தேசிய இனக்குடும்ப நிகழ்ச்சியில் சாதாரணக் கடைநிலையில் இருந்த ஒரு பெண்மணி ஈஷ் திபெத் கமிட்டி உறுப்பினராக உயர்ந்தது பற்றிய தகவலை பாராட்டி, இத்தகைய மனிதர்களால் தான் சீனா தலை நிமிர்ந்து நிற்கிறது என்கிறார். நேயர்களின் பாராட்டுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி. தொடர்ந்து தொடர்பு கொள்ளுங்கள். மீண்டும் 18வது நேயர் மன்ற மாநாடு முடிந்ததும் சந்திப்போம். அப்போது மாநாட்டின் வெற்றிச் செய்திகளை பகிர்ந்து கொள்வோம். நன்றி. மதுரை அவனியாபுரம் கோ எஸ் வெங்கடேஷ், மேத்திங்களில் ஒலிபரப்பான மலர்ச் சோலை நிகழ்ச்சியைப் பாராட்டியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் சின்னவளையம் பி பி பிரகாஷ் அக்டோபர் 3 உணவு அரங்கத்தில் செலரி, வெள்ளிரிக்காய் கோழி இன்றிச்சி, பூண்டு, கொண்டு தயாரிக்கப்படும் நாடுல்லில் வகை பற்றி கேட்டோம். சரியான கலவையில் சேர்த்தைல் தான் சுவையாக இருக்கிறது என்கிறார். உத்தரக்குடி நேயர் சு கலைவாணன் ராதிகா, உணவு அரங்கத்தில் அரைத்த மானவயே திரும்ப அரைக்காதீர்கள் என்கிறார். ஒரு பைத்தியக் காரணின் டைரி கதையில் மனிதளை மனிதன் தின்மான் என்பது அருவருப்பாக இருந்தாலும், கதை போகப் போக திசிலாக இருந்தது. கதை தத்ரூபமாக சொல்லப்பட்டது என்று கூறியுள்ளார். சீன வானொலி நிகழ்ச்சிகள் மூலமாக மக்களின் பொது அறிவு விருத்தி அடைகிறது என்று எழுதியுள்ளார். இலங்கை காத்தான்குடி நேயர் ஏ ஏ எம் காஜித் மற்றொரு காத்தான்குடி நேயர் எம் எம் எப் மபாஸா, பல நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார்.