தற்போது, வட சீனாவின் உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தில் 21 அரசு நிலை இயற்கை பாதுகாப்பு மண்டலங்கள் இருக்கின்றன என்று எமது செய்தியாளர் கூறுகிறார். 2001ஆம் ஆண்டில் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்கும் திட்டப்பணிகள் துவங்கியது முதல், உள் மங்கோலியாவில், காடுகள், சதுப்பு நிலங்கள், காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்கள், பாலைவனம் உள்பட 125 பாதுகாப்பு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த நிலப்பரப்பு, சுமார் ஒரு கோடி ஹெக்டராகும்.
|