பட்டுப்பாதை
அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் "பட்டுப்பாதை" நெடுகிலும் உள்ள பண்பாட்டு மரபுச் செல்வங்களைப் பராமரிக்க 100 நிபுணர்களுக்கு இணைந்து பயிற்சி தரும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக துவக்குவதற்கான உடன்படிக்கையில் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் இன்று டோக்கியோவில் கையொப்பமிட்டன. தென் கொரியாவின் Samsung குழுமத்தின் ஜப்பானிய கிளை இத்திட்டத்துக்கு நிதி வழங்குகின்றது. சீன மற்றும் ஜப்பானிய அமைப்புகள், பயிற்சியளிப்பதற்கு பொறுப்பேல்கின்றன. இதற்காக சீனாவின் பல்வேறு இடங்களிலிருந்து 100 நிபுணர்கள் திரட்டப்படுவார்கள். உடன்படிக்கை கையொப்பமான நிகழ்ச்சியில் பேசிய ஜப்பானிய பிரதிநிதி, இந்தத் திட்டம், மூன்று நாடுகளுக்கிடையே பண்பாட்டுத் தொடர்பை மேலும் வளர்த்து, ஆசியாவிலும், உலகிலும் நட்புறவையும் வளத்தையும் மேம்படுத்தும் என்றார்.
|