சிறுப்பான்மை தேசிய இன வட்டாரத்தின் வளர்ச்சி
cri
சிறுப்பான்மை தேசிய இன வட்டார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், சீனாவின் பல்வேறு இடங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்று சீன தேசிய இன விவகார ஆணையத்திலிருந்து தகவல் கிடைத்தது.சீனாவின் மொத்த சிறுபான்மை தேசிய இன மக்கள் தொகை 10 கோடியை தாண்டியுள்ளது. சில வட்டாரங்கள் பின் தங்கிய நிலையில் இருக்கின்றன. அங்குள்ள அடிப்படை வசதிகள் பற்றாக்குறைவாகும். வறுமையில் வாழும் மக்கள் தொகை அதிகமாகும். அடுத்த 5 ஆண்டுகளில், யுன்னான் மாநில அரசின் நேரடியான தலைமையின் கீழுள்ள வாரியங்களின் ஊழியாவர்களில் குறைந்தது ஒருவர் சிறுபான்மை சிறிய தேசிய இன அதிகாரியாக இருக்க வேண்டும். குவான்துங் மாநிலத்தின் சிறுபான்மை தேசிய இன வட்டாரத்தில் நெடுஞ்சாலை நிறுவி, தேசிய இன கல்வி வளர்ச்சியுறச்செய்ய மாநில அரசாங்கம் கோடிக்கணக்கான யுவான் முதலீடு செய்யும். இவ்வாண்டு முதல், லியௌனின் மாநிலத்தின் சிறுபான்மை தேசிய இன தன்னாட்சி மாவட்டங்களிலுள்ள விவசாய்கள், ஒத்துழைப்பு மருத்துவ அமைப்பு முறையிலிருந்து நலன் பெறுவார்கள், அடுத்த ஆண்டு, இம்மாநிலத்தின் சிறுபான்மை தேசிய இன கிராமங்கள், அடிப்படையாக வறுமையிலிருந்து விலகும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|