சீன பசுமைமயமாக்கல் நடவடிக்கையில் அந்நிய தூதர்களின் பங்கெடுப்பு
cri
பெரு, வியட்நாம், கஜக்ஸ்தான், தாஜிக்ஸ்தான் முதலிய பத்துக்கும் அதிகமான நாடுகளிலிருந்து வந்த, சீனாவுக்கான தூதர்கள், Zhou Kou Dian எனும் இடத்தில் பெய்சிங் குரங்கு மனிதன் சிதிலத்தில் இன்று நடைபெற்ற, "பண்பாட்டு மரபுச்செல்வத்தைப் பாதுகாத்து, மனித குலத்தின் ஊரை கூட்டாக அமைப்பது" என்ற பசுமைமயமாக்கல் நடவடிக்கையில் கலந்து கொண்டனர். பண்பாட்டு மரபுச்செல்வத்தைப் பாதுகாப்பதை மேலும் வலுப்படுத்தும் வகையில், இவ்வாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டின் ஜூன் திங்களின் இரண்டாவது சனிக்கிழமை "பண்பாட்டு மரபுச் செல்வ நாளாக" கொள்வதென, சீன அரசு முடிவு மேற்கொண்டுள்ளது. Zhou Kou Dian பெய்சிங் குரங்கு மனிதன் சிதிலம், பெய்சிங்கின் தென் மேற்கிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1927ம் ஆண்டில் இச்சிதிலம் அதிகாரப்பூர்வமாகத் தோண்டப்பட்டது. 1987ம் ஆண்டு, யுனேஸ்கோ இதனை, "உலகப் பண்பாட்டு மரபுச் செல்வமாக" அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.
|
|