ஜெர்மனியில் நடைபெறும் கால்பந்தாட்ட உலகக் கோப்பையின் அடுத்த கட்டத்தில் நுழையும் 16 அணிகளில் இதுவரை 12 அணிகள் தெரிவாகியுள்ளன. ஏ முதல் எஹ் வரையாக எட்டு குழுக்களாக தங்களுக்குள் விளையாடி அவற்றில் சிறந்த இரண்டு அணிகள் ஒவ்வொரு குழுவிலுமிருந்து தேர்வு செய்யப்பட்டு அடுத்தக் கட்ட போட்டியில் கலந்து கொள்ளும். ஜூன் 23ம் நாள் காலை வரையிலான நிலவரப்படி
அடுத்தக் கட்டத்தில் நுழையும் அணிகள்.
ஏ குழுவில்: ஜெர்மனி, ஈகுவடோர்
பி குழுவில்: இங்கிலாந்து, ஸ்வீடன்
சி குழுவில்: அர்ஜென்டினா, நெதர்லாந்து
டி குடுவில்: போர்ச்சுகல், மெக்சிகோ
ஈ குழுவில்: இத்தாலி, கானா
எஃப் குழுவில்: பிரேஸில், ஆஸ்திரேலியா
ஜி மற்றும் எஹ் குழுவின் அணிகளில் குழுப் பந்தயங்கள் இன்று முடிந்தபின் அடுத்த கட்டத்தில் நுழையும் அணிகள் எவை என்பது அறியப்படும்.
தற்போதைய நிலவரப்படி அணிகள் பெற்ற புள்ளிகள் :
ஜெர்மனி,போர்ச்சுகல்,பிரேஸில் - 9 புள்ளிகள்
இங்கிலாந்து, அர்ஜென்டினா,நெதர்லாந்து,இத்தாலி - 7 புள்ளிகள்
ஈகுவடோர், கானா, ஸ்பெயின் - 6 புள்ளிகள்
ஸ்வீடன் - 5 புள்ளிகள்
மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து, தென் கொரியா - 4 புள்ளிகள்
போலந்து, பராகுவே,ஐவரி கோஸ்ட், செக் குடியரசு, உக்ரேன் - 3 புள்ளிகள்
அங்கோலா, க்ரோவேஷியா, பிரான்ஸ் - 2 புள்ளிகள்
மற்ற அணிகள் - 1 புள்ளி அல்லது புள்ளி ஏதும் எடுக்கவில்லை.
|