• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-29 21:16:04    
பல்வேறு ஹோட்டல்கள்

cri

நாய் ஹோட்டல்

அமெரிக்காவின் ஆட்ஹோ மாநிலத்தின் நாய் ஹோட்டல் என்ற ஹோட்டல், நாய் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில், ஹோட்டல் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில், அதற்கு இருவர் அறை ஒன்று மட்டுமே உள்ளது. அதன் முதுகு மற்றும் வாய் பகுதிகளில் இரண்டு வரவேற்பறைகள் உண்டு. சாரிவன் தம்பதி, இந்த ஹோட்டலின் உரிமையாளராவர். இவர்கள் தொடக்கத்திலேயே மரச்செதுக்கல் வியாபாரம் செய்தார்கள். பெரியதும் சிறயதுமான பல்வகை நாய்களை அவர்கள் செதுக்குகிறார்கள். வாடிக்கையாளர்கள் தமக்கு பிடித்தமான நாய் நிழற்படங்களை வழங்கினால், இவர்கள் பல்வகை அழகு மிக்க மரத்தாலான நாய்களை செதுக்கி வழங்குவார்கள்.

மீன் தொட்டி ஹோட்டல்

இந்த ஹோட்டல் ஏரியின் மையத்தில் அமைந்துள்ளது. அது செந்நிற கூரையும் வெண் நிற சன்னலும் உடையது. கடல் அடிக்கு கீழ் 3 மீட்டர் ஆழத்தில் அறை ஒன்று உள்ளது. அதற்குள் நுழைந்தால் மீன் தொட்டிலில் வைக்கப்படும் மீன் போல் மாறியிருப்பீர்கள். சன்னல் வழியாக நீந்தி செல்லும் மீன்களை கண்டு ரசிக்கலாம். ஸ்விடன் நாட்டவர் ஒருவர் இதை கட்டியமைத்துள்ளார்.

சிறை ஹோட்டல்

நீங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால், பழைய சிறை ஹோட்டலில் தங்கலாம். அது உங்களுக்கு சிறப்பு அனுபவம் தரும். தவிரவும், உங்கள் செலவையையும் சிக்கனப்படுத்தும். இந்த ஹோட்டல் 1886ல் கட்டப்பட்ட ஒரு பழைய சிறைக்கூடத்தை மாற்றியமைத்து கட்டப்பட்டது. அதன் வெளி தோற்றம் மாற்றப்படவில்லை. ஆனால், அன்றைய சிறை அறைகள், இன்றைய விருந்தினர் அறைகளாக மாற்றப்பட்டுள்ளன. பயணிகள் தாராளமாக போய் வர முடியும். இங்கு தனி சிறைகள் கிடையாது. பலர் தங்க கூடிய பெரிய அறைகள் மட்டும் உள்ளன. கழிப்பறைகள் பொது கழிப்பறைகளாக உள்ளன.

தேயிலை பதனீட்டு ஆலை ஹோட்டல்

இலங்கையின் தேயிலை செடிகள் அடர்ந்த வயலில் வெள்ளை நிற கட்டிடம் ஒன்று காணப்படுகின்றது. இது தான் பழமை வாய்ந்த தேயிலை பதனீட்டு ஆலையாக இருந்தது. இப்போது, அது தேயிலை ஹோட்டலாக மாறியுள்ளது. பிரிட்டிஷ் பிரபு திரு பெரால்டி தொடக்கி வைத்த இவ்வாலை, 1973ல் மூடப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பின், இவ்வாலை ஹோட்டலாக புனரமைக்கப்பட்டது. இங்கு வந்த சுற்றுப்பயணிகள் எழில் மிக்க இயற்கை காட்சிகளைக் கண்டுரசிப்பதோடு, தேயிலை பறித்தெடுப்பது, தேயிலையைத் தீயால் உலர்த்துவது, பொட்டலம் கட்டுவது போன்ற வேலைகளிலும் ஈடுபடலாம்.