• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-03 13:29:12    
உலகின் நான்கு பெரிய காதல் நகரங்கள்

cri

செக்குடியரசின் பிராக் நகர்

செக் குடியரசின் தலைநகரான பிராக் கலை இலக்கிய மறு மலர்ச்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். ஆதலால் அங்கு ரோமாபுரி வடிவம் பாரோக் வடிவ பழமை வாய்ந்த கட்டிடங்கள் இது வரையிலும் காணப்படலாம். சிறியதும் பெரியதுமான கோபுரங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. "நூறு கோபுர நகர்" என்றும் அது பெயர் பெற்றுள்ளது. சாரிஸ் பாலத்தின் வழியே நடந்தால், இடைஇடையே முத்தமிடும் காதலர்களைக் காணலாம்.

ஜெர்மனியின் கோலொன் நகர்

கி.மு.முதலாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்நகர், "வடக்கு ரோமாபுரி"என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், இங்குள்ள தேவாலயங்களும் தேதக்கோயில்களும் வடக்கிலுள்ள ஜெருசலேம் என அழைக்கப்படுகின்றன. அவை புனித திருமணத்தின் காவலர்களாகவும் கருதப்படுகின்றன. மேலை நாட்டவர்கள் JESUS CHRIST முன்னிலையில் தமது விசுவாச உறுதி மொழி கூறுவது வழக்கம்.

கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகர்

இந்நகர், வான் தேவரான YUS யின் மகளின் பெயரால் சூட்டப்பட்டது. விவேகம் அழகு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் அவருடைய மகளின் பெயர் ஏதனா என்பதாகும். ஏதனாவின் மகன், அதாவது, இறக்கைகளுடன் கையில் தேவ வில் பூட்டும் காதல் தேவர், இந்த மர்மமான மலை நகருக்கு ஆழ்ந்த பாசத்தைக் கொண்டு வருகிறான்.  

போர்ச்சுகலின் தலைநகரான ரிஸ்பனின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஒபிதுஸ் நகர், போர்ச்சுகீஸிய மன்னர் தீனிஸ், ராணி தொன்னாவுக்கு வழங்கிய திருமண அன்பளிப்பாகும். அது திருமண சடங்கு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

போர்ச்சுகீசிய ஒபிதுஸ் நகர்

பனிக்கட்டியில் காட்சிக்கு வைக்கப்பட்ட பெரும் கடல் இறால்

இத்தாலியின் வடகிழக்கு பகுதியிலுள்ள வெஜின்சாஸ் நகரில் ஒரு பெரிய உணவகம், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், பெரும் கடல் இறால்களை பணிக்கட்டியில் காட்சிக்கு வைத்துள்ளது. இதற்காக, 688 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காரணம், அண்மையில் இத்தாலி அரசு வெளியிட்ட கொடுமை எதிர்ப்பு பற்றிய புதிய சட்டத்துக்கு இது முரணானது. இவ்வணவகத்தின் செயல், பெரும் கடல் இறாலை சித்திரவதை செய்வதாகும். பெரும் கடல் இறால் பனிக்கட்டியில் காட்சிக்கு வைக்கப்பட்டதால், அது மெல்ல மெல்ல மரணமடையும் என்று இந்நகரின் நீதி மன்றம் ஒன்று கருதுகிறது.