
கிழக்கு சீனாவில் சுமார் 2500ஆண்டு வரலாறுடைய பிரபல பண்பாட்டு நகரம் ஒன்று உள்ளது. மனித குலத்தின் தேவலோகமென சீன மக்களால் அழைக்கப்படும் சுசோ நகரம் தான் அது.
தொன்மை வாய்ந்த பூங்கா, இந்நகரின் தனிச்சிறப்பியல்பாகும். இந்நகரில் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ள 60க்கும் அதிகமான பழங்கால பூங்காக்கள் உள்ளன. சுசோ நகரிலுள்ள பழங்கால பூங்காக்களில் பல, தனியார் பூங்காவாகும்.
அதன் பரப்பளவு குறைவு. இருப்பினும், எல்லைக்குட்பட்ட இடத்தில் பூங்கா நிறுவியோர் செயற்கைக் குன்றை உருவாக்கி, மரம் வளர்த்து, கூடார மண்டபங்களைக் கட்டியமைத்து, குளம் உண்டாக்கி, பாலம் அமைத்தனர் சுசோவிலுள்ள தொன்மை வாய்ந்த பூங்கா, ஓசை இல்லாத கவிதை, கன வடிவ ஓவியம் என அழைக்கப்படுகின்றது.
பூங்காவில் உலா வரும் போது, கவிதை பாடுவது, ஓவியம் கண்டுகளிப்பது போல தோன்றுகிறது. சுசோ நகரில், தொன்மை வாய்ந்த பூங்காக்களை உருவாக்குவதென்ற உருவரைவுக் கருத்தை உலகப் பண்பாட்டு மரபுச் செல்வக் கமிட்டி புகழ்ந்து பாராட்டியுள்ளது.
1997ஆம் ஆண்டு, சுசோ நகரின் சுவொசன் பூங்கா, வான்ஸ் பூங்கா, லியூ பூங்கா, சிங்கப் பூங்கா ஆகியவை, உலகப் பிரபல பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
|