உலக மரபுச்செல்வ மாநாட்டில் சீனாவின் விண்ணப்பம்
cri
லிதுவானியாவின் தலைநகர் Vilniusஇல் நடைபெறவுள்ள 30வது உலக மரபுச்செல்வ மாநாட்டில், சீனாவின் இரண்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். உலக இயற்கை மரபுச்செல்வத்தில் சேர்ப்பதற்காகவும் Si Chuan மாநிலத்து பாண்டா புகலிடமும், உலகப் பண்பாட்டு மரபுச்செல்வத்தில் சேர்ப்பதற்காகவும் ஹநன் மாநிலத்து அன் யங்கிலுள்ள இங் இடிப்பாடும் தொடர்பான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன. யுனேஸ்கோவின் சீன தேசியக் கமிட்டியின் தலைமை செயலர் டிங் சியோ காங் இன்று பெய்சிங்கில் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், இந்த இரண்டு விண்ணப்பங்களும் யுனேஸ்கோ நிபுணர்களின் துவக்க நிலை ஆய்வில் அங்கீகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். சீனக் கட்டுமான அமைச்சகம் வெளியிட்ட முதலாவது தொகுதி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 30 மரபுச்செல்வங்கள் உலக மரபுச்செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்படும் நிலையில் உள்ளன.
|
|