ஷாங்காய் மாநகரில் கடற்கரை
cri
சீனப் பெருநிலப்பகுதியின் மிகப் பெரிய செயற்கை கடற்கரை இன்று ஷாங்காய் மாநகரில் கட்டிமுடிக்கப்பட்டது. தெற்கு கடலோரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த செயற்கை கடற்கரை, 2010ம் ஆண்டு நடைபெற உள்ள ஷாங்காய் உலக பொருட்காட்சிக்காக கட்டப்பட்ட சிறப்பு சுற்றுலாத் திட்டமாகும். 25 கோடி யுவான் முதலீட்டுடன் 7 லட்சத்து 90 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பில் இச்செயற்கை கடற்கரை கட்டப்பட்டுள்ளது. தங்க மஞ்சள் நிறமுடைய மணல் போடப்பட்டு, நீல நிறக் கடல் நீர், நீச்சலடிப்பதற்கு பொருத்தமாக உள்ளது. எதிர்வரும் 13ம் நாள் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட இருக்கும் இக்கடற்கரையில் ஐயாயிரம் பயணிகள் நீந்திக்குளிக்கலாம். மேலும், பல பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
|
|