சீனாவின் சிறுபான்மை தேசிய இனப் பிரதேசப் பொருளாதார வளர்ச்சி
cri
சிறுபான்மை தேசிய இன மற்றும் தேசிய இனப் பகுதிகளில் விரைவான சமூக-பொருளாதார வளர்ச்சியை அடைய பாடுபட வேண்டும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டியின் தலைவர் சியா சிங் லின் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் வடக்கு சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட அவர், அங்குள்ள மங்கோலிய இன, Owenke இன ஆயர்களின் குடும்பங்களையும், சில தொழில் நிறுவனங்களையும் பார்வையிட்டார். சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களில், அப்பகுதிக்கே உரித்தான தொழில்கள் ஆக்கப்பூர்வமாக வளர்க்கப்பட வேண்டும். எல்லைப்பகுதி சாதகமான நிலைமையைப் பயன்படுத்தி, சுற்றுப்புறங்களிலுள்ள நாடுகளுடன் எண்ணெய், மரப்பலகை, இரும்பற்ற உலோகம், வேளாண்மை, கால் நடை வளர்ப்பு முதலிய துறைகளில் ஒத்துழைப்பைப் பெரிதும் வளர்க்க வேண்டும் என்று அவர் வற்புறுத்திக் கூறினார். பல்வேறு நிலையிலான அரசியல் கலந்தாய்வு மாநாட்டு அமைப்புகள், தேசிய இனப் பிரதேசத்து சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முன்மொழிவுகளை கூறி, உற்பத்தியிலும் வாழ்க்கையிலும் ஏற்பட்டுள்ள இன்னல்களை தீர்ப்பதற்கு உதவிட வேண்டும் என்றும் சியா சிங்லின் கோரினார்.
|
|