• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-26 12:17:55    
திபெத்தின் மாற்றம்

cri

திபெத் இன இளைஞர்

திபெத் பற்றிய பல்வேறு சீர்திருத்தங்கள் மீது நடுவண் அரசு நர்ப்பந்தத்தை திணிக்கவில்லை. திபெத் உள்ளூர் அரசு, சுயமாக சீர்திருத்தம் செய்ய வேண்டும். மக்கள், சீர்திருத்தக் கோரிக்கை முன்வைத்தால், திபெத்தின் தலைவர்களுடன் கலந்தாய்வு முலம் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்த 17 உடன்படிக்கைகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே, திபெத் சமாதான விடுதலை பெற்றதற்கு பிந்திய பல ஆண்டுகளிலும் திபெத்தில் நலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறை நிலவியது என்று அவர் விளக்கிக்கூறினார்.

திபெத் இன பெண்கள்

1955ம் ஆண்டு மார்ச்ச திங்களில், சீனத் தலைவர் மா சே தூங் முன்மொழிந்த படி, திபெத்தின் இரண்டு முக்கிய மத தலைவர்களான 14வது தலாய்லாமா, பத்தாவது பான்ச்சான் ஆகியோரின் ஒப்புதலுடன் திபெத் தன்னாட்சி பிரதேசத்துக்கான ஆயத்த கமிட்டியை நிறுவ நடவண் அரசு முடிவு மேற்கொண்டது. தலாய்லாமா, இக்கமிட்டியின் தலைவராகவும் பான்ச்சான் இக்கமிட்டியின் முதலாவது துணை தலைவராகவும் பதவி வகிக்க வேண்டும் என தீர்மானித்தது. ஓராண்டுக்குப் பின், இக்கமிட்டி லாசாவில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இதில் மொத்தம் 51 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் 48 பேர் திபெத் இனத்தவர்களாவர். இதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நடுவண் அரசு, அப்போதைய துமை தலைமை அமைச்சர் சென் யீயை அங்கு அனுப்பியது.

சமாதான விடுதலை பெற்ற பின், திபெத் இரண்டு பெரும் இன்னல்களை எதிர்நோக்கிறது. ஒன்று. அப்போது, திபெத் மக்கள் வாழ்க்கை மிகவும் வறுமையாக இருந்தது. வளர்ச்சியும் சீர்திருத்தமும் அவசரமாகத் தேவைப்பட்டன. மறுபுறம், வரலாறு, மதம் முதலிய சிறப்பு காரணிகளினாலும், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய வெளிநாட்டு சகதிகளின் நீண்டகாலமாக தூபம் போட்டதாலும், திபெத், ஹன் இன மக்களிடையே கடும் வேற்றுமை நிலவி வந்தது.