வெய்ஹைய் நகரம், கிழக்கு சீனாவின் சாங்துங் மாநிலத்தைச் சேர்ந்த கடலோர நகரமாகும். அது, சியொதுங் தீபகற்பத்தின் கிழக்கு முனையில் அமைந்துள்ளது. வெய்ஹைய் நகரை, 3 பக்கமும் கடல் சூழ்ந்துள்ளது.
கடல் கரையின் நீளம் சுமார் ஆயிரம் கிலோமீட்டர். இது, சீனப் பெரு நிலப்பகுதியிலுள்ள கடற்கரையின் மொத்த நீளத்தில் சுமார் 5.6 விழுக்காடாகும்.
கடலோரத்தில் உள்ள வெய்ஹைய் நகரத்தில் காற்று தூய்மையானது. சுற்றுச்சூழல் அழகானது. நகரப்பகுதியில் 80 விழுக்காட்டுக்கு மேலான இடங்களில் மரங்களும் செடிகொடிகளும் மலர்களும் வளர்கின்றன. கோடை காலத்தில் கடும் வெப்பமில்லை.
குளிர்காலத்தில் கடும் குளிர் கிடையாது. இதன் விளைவாக, ஆண்டுதோறும் அதிகமான பயணிகள் வெய்ஹை நகருக்கு வருகை தருகின்றனர். 2003ல், ஐ.நா. மனிதக் குடியிருப்புப் பரிசு இந்நகருக்கு வழங்கப்பட்டது. வெய்ஹைய் நகரை விட்டு வெளியே சென்றால் மேலும் அழகான காட்சி உங்கள் கண்களுக்கு முன் தென்படுகின்றது.
வெய்ஹைய் கடலோரத்தில் சுமார் பெரியதும் சிறியதுமாக 100 தீவுகளும் 30க்கும் அதிகமான அழகான விரிகுடாக்களும் உள்ளன. பசுமையான மலைகளும் நீல நிறமுடைய கடலும் ஆகாயமும் எழில் மிக்க காட்சியை உருவாக்கியுள்ளன.
|