மாஸ்கோவில் நடைபெறும் 3வது மகளிர் உலக கோப்பை கால் பந்து போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் விளையாட சீனா தகுதி பெற்றுள்ளது. இன்று விடியற்காலை நடந்த அரை இறுதிப் போட்டியில் சீன அணி 5க்கு 4 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணியை தோற்கடித்தது. ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் பெனால்ட்டி கிக் மூலம் சீனா வெற்றி பெற்றது.
மற்றொரு அரை இறுதிப் போட்டியில் வட கொரிய அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரெசில் அணியை தோற்கடித்தது. சீன அணிக்கும் வட கொரிய அணிக்ககும் இடையே செப்டெம்பர் 3ம் நாள் இறுதிப் போட்டி நடைபெறும். நடப்பு உலக பெண் இளைஞர் கால் பந்து சாம்பியன் வென்றெடுக்கும்.
|