சமூக காப்புறுதிக்குச் சீனத் திட்டம்
cri
நேற்று பெய்சிங்கில் நிறைவுற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16வது மத்தியக் கமிட்டியின் 6வது முழு அமர்வில், சீனாவில் 2020ம் ஆண்டுக்குள் சோஷலிச இணக்க சமூகத்தை உருவாக்கும் குறிக்கோள் முன்வைக்கப்பட்டது. நகரவாசிகளுக்கும் கிராமவாசிகளுக்கும் சமூக காப்புறுதி வழங்குவது இதன் முக்கிய உள்ளடக்கமாகும். கடந்த ஆண்டின் இறுதி வரை, சீனாவில் வறுமை காப்புறுதி, மருத்துவ காப்புறுதி மற்றும் வேலையில்லா திண்டாட்டத்துக்கு காப்புறுதித் தொகை பெறுவோரின் எண்ணிக்கை பத்து கோடியைத் தாண்டியுள்ளது. ஆனால், இவற்றில் காப்புறுதித் தொகை பெறுவோரின் அதிக எண்ணிக்கை, பத்து விழுக்காடு மட்டுமே. அடுத்த 14 ஆண்டுகளில் சீனாவில் சமூக காப்புறுதி தொகை பெறுவோர் இப்போது இருப்பதை விட பல மடங்கு அதிகமாக இருப்பர் என்பதையும், உலகில் மிகப் பெரிய சமூக காப்புறுதி வழங்கும் நாடாக சீனா விளங்கும் என்றும் சீனாவின் தொழிலாளர் நலன் மற்றும் சமூக காப்புறுதி அமைச்சர் Tian Cheng Ping கூறினார்.
|
|