உலக விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு
cri
7வது உலக விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு அடுத்த ஆண்டின் அக்டோபர் திங்களில் பெய்சிங்கில் நடைபெறும். இது குறித்த உடன்படிக்கையில் இன்று பெய்சிங்கில் பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக்கமிட்டியும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் கையொப்பமிட்டன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் கமிட்டியும், ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட அலுவலகமும் கூட்டாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மாநாட்டை நடத்துகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட அலுவலகம், ஐ.நா வளர்ச்சித்திட்ட அலுவலகம், உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு ஆகியன இதில் கலந்து கொள்ளும். பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக்கமிட்டியின் பொறுப்பாளர் பேசுகையில், சுற்றுச்சூழலுக்கு நேயமான சமூகத்தையும், பசுமை ஒலிம்பிக் போட்டியையும் உருவாக்குவதில் பெய்சிங் கண்டுள்ள முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதற்கான முக்கிய மேடையாக 7வது உலக விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு திகழும் என்றார்.
|
|