சர்வதேச பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு
cri
இன்று, ஐ.நா மற்றும் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 7 நாடுகளின் 12 சர்வதேச பாதுகாப்பு நிபுணர்களும், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளின் சீனாவில் உள்ள தூதரகங்களின் காவல்துறை விவகாரத் தொடர்பு அதிகாரிகளும் பெய்சிங்கில், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் பாதுகாப்பு பற்றியும், பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒத்துழைப்பு பற்றியும் விவாதித்தனர். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான தொடர்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக் கருத்தரங்கில், சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு, நாடு கடந்த குற்றங்கள், மூன்றாவது நாடு மீதான பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவை தொடர்பாக, அவர்கள் தொடர்பு கொண்டு, விவாதித்தனர். பெய்சிங் மாநகரின் பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் Ma Zhen Chuan கருத்தரங்கில் பேசுகையில், ஐ.நா மற்றும் பல்வேறு நாடுகளின் நிபுணர்களுடன் பெய்சிங் காவல்துறை ஆக்கப்பூர்வத் தொடர்பு கொண்டு, சர்வதேச பாதுகாப்பு அமைப்பின் அனுபவங்களை பயன்படுத்தி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் பாதுகாப்பு பணிக்கு சிறந்த அடிப்படையை உருவாக்கும் என்றார்.
|
|