தற்போது சீனாவில் அரசு சாரா நிறுவனங்கள் ஆண்டுக்கு 10 விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரித்து வருகின்றன. அவற்றின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சமூகப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி இணக்கமான சமூகத்தை உருவாக்குவதில் அவை முக்கிய பங்கு ஆற்றியுள்ளன.
சீன சிவில் விவகார அமைச்சகத்தின் துணை அமைச்சர் Dou Yu Pei பேசுகையில், கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் அரசு சாரா நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. சீனாவின் நகரங்களிலும் கிராமங்களிலும் பரவியுள்ள அவை, பல்வேறு துறைகளுடன் தொடர்புடையவை என்றும், சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் நிறுவனங்களில் 30 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர் என்றும் கூறினார்.
|