• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-21 10:44:45    
ஹோ யிங் துங் அவர்கள் பற்றி

cri

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டித் துணைத் தலைவர் ஹோ யிங்துங் கடந்த அக்டோபர் 28ஆம் நாள் பெய்சிங்கில் காலமானார். அவர்கள் பற்றிய சில தகவல்கள் வருமாறு-

தன்னை பற்றிய மதிப்பீடு. ஹோ யிங்துங் தம்மை பற்றி மதிப்பீடு செய்ய விரும்பவில்லை மற்றவர்கள் பற்றியும் மதிப்பீடு செய்ய மாட்டார். கொரிய போரின் போது நடந்த கடல்வழி மூல வர்த்தகமும், மகௌவில் சூதாட்டத் துறையும் உள்ளிட்ட, உலக மக்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ள, ஆனால் உலக மக்கள் அறியாத சில உண்மை நிலைமைகள் பற்றி பேசுகையிலும் அவர், பிறரை வியக்கச் செய்யும் வார்த்தைகளை பயன்படுத்துவது மிகவும் குறைவு. "நீங்கள் வணிகத் துறையில் ஈடுபட்டு ஏற்கனவே 50 ஆண்டுகள் ஆகிவிட்டது, தங்களின் இந்த காலகட்டத்திலான அனுபவங்களை மதிப்பீடு செய்தால், தங்களுக்கு எத்தனை மதிப்பெண்ணை வழங்குவீர்கள்"என்று கேள்விக்கு பதிலளித்த போது, ஹோ யிங் துங் சிறிதும் சிந்திக்காமல், குறைந்தது 100 மதிப்பெண்ணைத் தாண்டும் என்று கூறினார்.

தமக்கு 100க்கு மேலான மதிப்பெண்ணை வழங்கியது ஏன் என்பது பற்றி விளக்கிக் கூறிய அவர், கடந்த பல பத்து ஆண்டுகளில், நான் எனக்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்காகவும் பணத்தை சம்பாதித்தேன். கொரியப் போரின் போது முதல், எனக்கு உதவி செய்தவர்கள் அல்லது என்னுடன் ஒத்துழைத்தவர்கள் அனைவரும் பணம் சம்பாதித்தனர் என்றார். நான் யாரையும் இம்சிக்கவில்லை, மாறாக என்னுடன் ஒத்துழைத்தவர்கள் பலர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் என்று நான் துணிவுடன் சொல்ல விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் கூறினார்.

நண்பர்களால் மதிக்கப்பட்டவர். வணிகத் துறையில் 50 ஆண்டுகளாக ஹோ யிங் துங் போராடினார். இதற்கிடையில், கொரிய போரின் போது, கடல்வழி வர்த்தகத்தில் அவருடைய செயல்பாடுகளின் உண்மை நிலைமை மற்றவர்களுக்குத் தெரியாமை, அல்லது நிலைப்பாடும் கருத்தும் வேறுபட்டதாக இருந்தமை ஆகியவற்றின் காரணமாக, சிலர் அவரை குறைகூறியது தவிர, இதுவரை, அவருடைய வணிகச் செயல்பாடு பற்றிய எதிர்மறை செய்திகள் கேள்விப்படவே இல்லை. ஹாங்காங் மற்றும் மகௌ வணிக வட்டாரங்களுக்கிடையில் ஹோ யிங்துங் கௌரவம் மிகுந்தவராவார். அனைவரும் அவரை பாராட்டுகின்றனர். குறிப்பாக, அவருடன் ஒரே தலைமுறையாக இருக்கும் அந்த வணிகர்கள், ஹோ யிங்துங்கிற்கு மிகவும் மதிப்பு அளிக்கின்றனர்.

எப்பொழுதும் தனியாக சென்று வருபவர். பணம் சம்பாதித்து செல்வமடைந்த பிறகு, மற்றவரால் கடத்திச் செல்லப்படுவீர்கள் என்று நீங்கள் கவலைப்படுவதுண்டா என்று ஒரு நாள் ஒருவர் கேட்ட போது, எனக்கு கவலையே இல்லை, ஒரு மனிதன், மற்றவருக்குத் தீமை விளைவிக்கும் விடயங்களில் ஈடுபடாமல் இருப்பது மிக முக்கியம். நான் தீய விடயம் எதையும் செய்யவில்லை, எனவே மனம் அமைதியாக இருக்கின்றது என்று ஹோ யிங் துங் பதிலளித்தார்.

பல ஆண்டுகளாக, ஹோ யிங் துங் மெய் காவலர்களுடன் வெளியே செல்வது இல்லை, அவர் எப்பொழுதும் தனியாக போய் வருகின்றார் என்று ஹோ யிங்துங்குடன் பல ஆண்டுகளாக வேலை செய்த பலர் கூறினார்கள். ஹோ யிங்துங்கை பேட்டி கண்ட சில திங்கள் காலத்தில், அவர் எப்பொழுதும் தனியாக தொங்கு கம்பிவழி வண்டி மூலம் மலையிலிருந்து இறங்கி, தனியாக நடந்து சீனத் தலைமை வணிகச் சங்கத்துக்கு சென்று கூட்டத்தில் கலந்துகொண்டார், சீன பொழுது போக்கு அரங்கத்துக்கு சென்று டென்னிஸ் விளையாடினார்