கிறிஸ்துமஸ் விழாவுக்கு முந்திய நாளில், பெய்சிங்கிலுள்ள கோயில்களில் ஆள்கூட்டம் காணப்பட்டது. பெய்சிங்கின் சியோ வூ மென் என்னும் இடத்தில் உள்ள புகழ் பெற்ற டிங் சு தெள கோயிலில் நேற்றிரவு நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த சிறிஸ்தும மத நம்பிக்கையாளர்கள் வருகை தந்துள்ளனர். பிற்பகல் 5 மணிக்கு வழிபாட்டு விழா துவங்கியிருந்தது. பணியாளர்களின் மதிப்பீட்டின் படி, முதலாவது வழிபாட்டு விழாவில் 1500 பேர் கலந்து கொண்டனர். சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் துணை தலைவரும் சீன கத்தோலிக்க மத நாட்டுப்பற்று சங்கத்தின் தலைவருமான பேராயர் ப் டியன் சாங், மத நம்பிக்கையாளர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். புத்தாண்டில் மகிழ்வடைவதாக அனைவரும் பரஸ்பரம் வாழ்த்தினர். 25ம் நாள், இரண்டு ஆங்கில மொழி வழிபாட்டு விழாக்கள் உட்பட, நான்கு வழிபாட்டு விழாக்கள் நடைபெறுவதாக தெரிய வருகின்றது.
|