கடந்த 5 ஆண்டுகளில், சீனாவின் தேசிய இன தன்னாட்சி வட்டாரங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 74 விழுக்காடு அதிகமாகும் என்று, சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி துணைத் தலைவர் ISMAIL AMAT தெரிவித்தார்.
இன்று பெய்ஜிங்கில் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில், பெரும்பாலான தேசிய இன வட்டாரங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, ஆண்டுக்கு 10 விழுக்காட்டுக்கு மேல் என்ற கூடுதலான வேகத்தில் அதிகரித்து வருகிறது. இது, சீனாவின் சராசரி வளர்ச்சி நிலையை விட உயர்ந்தது என்றும், இவ்வட்டாரங்களில் கிராமவாசிகளின் நபர்வாரி வருமானம், பெருமளவில் அதிகரித்து, வறிய மக்கள் தொகையில், சுமார் 50 லட்சம் குறைந்துள்ளது என்றும், நீர் சேமிப்பு, நெடுங்சாலை, தொலைத்தொடர்பு முதலிய அடிப்படை வசதிகள் மேம்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
|