பண்டைய நியா நகரின் மரபுச் சிதிலத்தின் நீளம் தெற்கிலிருந்து வடக்காக சுமார் 30 கிலோமீட்டர். அதன் அகலம், கிழக்கிலிருந்து வடக்கிற்காக சுமார் 5 கிலோமீட்டர். புத்த மதக் கோபுரங்கள், கோயில்கள், கல்லறைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட அதிகமான மரபுச் சிதிலங்கள் உள்ளன.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் வாழ்க்கை விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால், இந்தப் புராதன நகரம், எல்லையில்லாத தாக்லாமாகன் பாலை வனத்தில் புதைந்துவிட்டது. 1901ஆம் ஆண்டில் ஸ்தெயின் என்பவர் இவ்விடத்திலிருந்து விலை மதிப்பற்ற பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றதால், உலகம் அதிர்ச்சியடைந்தது.
ஹௌதியென் நகரில், நியா போன்ற பழம் பெரும் நகரைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். இந்த வரலாற்றுக் கதை, பாலைவனத்தில் புதைந்துபோன மரபுச் சிதிலங்கள் பற்றி வரலாற்று ஓவியங்கள் போல மக்களுக்கு நினைவூட்டுகின்றன.
திபெத் மொழியில் யியுதியெ என்பது ஆபரணக்கல் உற்பத்தி இடமென பொருள்படுகின்றது. ஆபரணக்கல் உற்பத்தியிலும் இன்றைய ஹௌதியென் நகரம், பண்டைக் கால யியுதியென் நகரம் போல உலகில் புகழ் பெற்றுள்ளது.
இந்நகரில் உற்பத்தியாகும் மதிப்பு மிக்க பல்வகை ஆபரணக்கற்கள் சுவீடன், இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
|