• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-11 10:39:18    
ஓமெய் மலை மற்றும் லெசான் மலை

cri

ஓ மெய் மலை, சீனாவின் முதலாவது மலை என்று நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வருகிறது. கி.பி.4ம் நூற்றாண்டிலேயே இந்திய துறவி பெள சாங், இம்மலையில் சுற்றுலா மேற்கொண்ட பின், இம்மலையை சூரியன் உதயமாகும் இடத்தில் முதலாவது மலை என்று வியந்து பாராட்டினார். பண்டைக்கால இந்தியா, சீனாவை சூரியன் உதயமாகும் இடமென புகழ்ந்து போற்றியது. அதன் பின்னர், ஓ மெய் மலை, சீனாவின் முதலாவது மலை என்ற புகழை பெற்றது.

ஓ மெய் மலையின் தனிச்சிறப்பு வாய்ந்த கம்பீரமான தோற்றம், அதன் நீண்டகால வரலாறுடைய புத்த மத பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. கி.பி.ஓன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் புத்த மதம், ஓ மெய் மலையில் பரவியது. அத்துடன் இங்கு சீனாவின் முதலாவது புத்த மதக்கோயில் கட்டியமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறங்களில் இதர கோயில்கள் அமைக்கப்பட்ட பின், ஓ மெய் மலை, சீன புத்த மதத்தின் புனித இடங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இங்கு ஊதுவத்தியின் மணம் பரவியுள்ளது.

இம்மலையில் SAMANTABHADRA புத்தரை மக்கள் வழிபாடு செய்கின்றனர். அவர், உலகில் பல புத்தர்களின் மூத்த மகனாவார். புத்த மதம் இருக்கும் இடமெங்கும் அவர் காணப்படுகிறார். தற்போது ஓ மெய் மலையில் மொத்தம் 300க்கும் அதிகமான துறவிகளும் பிக்குகளும் இருக்கின்றனர். சுமார் 30 கோயில்கள் இங்கு காணப்படுகின்றன.

மலை உச்சியில் அமைந்துள்ள ஜின் திங் என்னும் இடம், ஓ மெய் மலையின் முக்கிய இடமாகும். இங்கு பளப்பளக்கும் மூன்று தங்க நிற மண்டபங்களுடன் 48 மீட்டர் உயரமுள்ள SAMANTABHADRA தங்க புத்தர் சிலை, மக்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வழிக்காட்டி யாங் தேள அம்மையார் கூறியதாவது:

இந்த SAMANTABHADRA புத்தர் கையில் தங்க ரூ யீ உடன், குறிப்பு, ரூ யீ என்பது, மங்கலத்தைக்காட்டும் ஒரு வகை ஜெட்கபொருளாகும். தலையில் பொன் மணி முடியை அணிந்துள்ளார். இந்தக் கம்பீரமான தோற்றத்தின் கீழ், அவர் சுவாரி செய்யும் 6 தந்தம் கொண்ட வெள்ளை யானை காணப்படுகிறது. புத்தர் சிலை, மண் உலகில் உள்ள இன்பம் கோபம், துயரம், மகிழ்ச்சி ஆகிய 4 வகை உணர்வுகளை காட்டுகிறது. மக்கள், எந்தத் திசையில் இருந்தாலும் அவருடை நேர் முகத்தை பார்க்க முடியும். இந்தப் புத்தரோ மக்களை நோக்கி பார்த்த வண்ணம் அனைவருக்கும் இன்பம் தருவார். அனைவருக்கும் புகலிடம் தருவார் என்றார்.புத்த மதம் ஓ மெய் மலையில் பரவி வரும் போக்கில், இம்மலையின் பண்பாடும் வளம் பெற்றுள்ளது. குறிப்பாக இங்குள்ள பல கோயில்களும் புத்த சிலைகளும் ஓ மெய் மலையின் எழில் மிக்க இயற்கைக் காட்சியுடன் இணைந்திருக்கும் தலைசிறந்த பண்பாடாக உருவாயின. இதைக் கருத்தில் கொண்டு தான், யுனெஸ்கோ, ஓ மெய் மலையை உலக இயற்கை மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வங்களில் ஒன்றாக சேர்த்துள்ளது.ஓ மெய் மலையில் சுற்றுலா மேற்கொண்ட பின் இங்கிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லெ சான் பெரும் புத்தர் சிலையைக் கண்டுகளிக்கலாம். இந்தச் சிலை, உலகில் மிக பெரிய புத்த சிலையாகும். இதிலிருந்து புத்த மதத்தின் மீதான அப்போதைய மத நம்பிக்கையாளர்களின் புக்தியை கண்டறிந்து வியப்படைவீர்கள். வழிக்காட்டி வூ லீ பிங் அம்மையார் கூறியதாவது:

இந்த லெ சான் புத்தர் சிலை ஏறக்குறைய கி.பி.7ம் நூற்றாண்டில், அதாவது சீனாவின் தாங் வம்சக்காலத்தில் அமைக்கப்பட்டது. துவக்கத்திலேயே இங்கு புனிதப் பயணம் மேற்கொண்ட ஹேதொங் என்னும் முனிவர், இவ்விடம் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமாதலால், இங்கு படகுகள் மூழ்கி உயிரிழப்புச் சம்பவங்கள் அடிக்கடி ஏற்பட்டதைக் கண்டறிந்தார். பின், லெசான் பெரிய புத்தர் சிலையைக் கட்டியமைப்பதன் மூலம் வெள்ளப்பெருக்கை வென்றடக்குவதென முடிவு செய்தார். ஆதலால், நன்கொடைக்காக, அவர் நாடெங்கும் சென்றார். லெசான் திரும்பிய போது, ஊழல் மிகுந்த அதிகாரி ஒருவரால் கைப்பற்றப்பட்டார். பேராத்திரம் அமைந்த அவர், என் கண்களைப் பிடுங்கலாம், ஆனால், இந்தச் சொத்து உனக்கு கிடைக்கவே கிடைக்காது என்று சொல்லி, தமது கண்களைப் பிடுங்கினார். இதைக் கண்ட அந்த அதிகாரி பயந்தோடி விட்டார். இந்தச் சிலையின் தலை கட்டிமுடிக்கப்பட்டதும் துறவி ஹேதொங், தேவலோகத்துக்குச் சென்றார் என்று அவர் கூறினார்.

பின்னர் இரண்டு தலைமுறையினரின் முயற்சிகளுக்குப் பின், அதாவது ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்குப் பின், லெசான் புத்தர் சிலை கட்டிமுடிக்கப்பட்டது. இன்று நாங்கள் தூரத்திலிருந்து இந்த புத்தர் சிலையைப் பார்க்கும் போது, துறவி ஹேதொங்கின் தியாக எழுச்சியையும் மலையைத் தோண்டி புத்தர் சிலையை உருவாக்கும் வீரசாகசத்தையும் வியந்து போற்றுகிறோம். எனவே, பல புத்தமத நம்பிக்கையாளர்கள், இங்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு சீனாவின் சிங்ஹேய் மாநிலத்தின் தொங்நாராச்சிங் கோயிலைச் சேர்ந்த உயிருள்ள புத்தர் NORBU RINPOCHE இவர்களில் ஒருவராவார். அவர் கூறியதாவது:

புத்த மத நம்பிக்கையாளர்களாகிய எங்களைப் பொறுத்த வரையில், இங்கு வந்து நீண்டகால வரலாறு வாய்ந்த கம்பீரமான மாபெரும் புத்தர் சிலையை மரியாதையுடன் வணங்க முடிந்தமை, எனக்கு மன அமைதியை தந்தது என்றார் அவர்.இனி, இந்தக் கட்டுரையிலுள்ள இரண்டு வினாக்கள்:1, ஓ மெய் மலை, சீனாவின் புனித புத்த மத இடங்களில் ஒன்றாக விளங்குகிறதா?2, லெசான் பெரிய புத்தர் சிலை, உலகில் மிக பெரிய புத்தர் சிலை. அதன் உயரம் எவ்வளவு?இக்கட்டுரையைக் கேட்ட பின், அவற்றுக்கான விடைகளை நீங்கள் இதுவரை சீனாவின் ராட்சத பாண்டாவின் ஊரான சிசுவான் மாநிலத்தில் இன்பப் பயணம் பற்றிய பொது அறிவிப்போட்டிக்கான இரண்டாவது கட்டுரையைக் கேட்டீர்கள். நாளை, அதன் மூன்றாவது கட்டுரையைக் கேட்கலாம்.