• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-12 15:41:56    
ஐ மங்

cri

வா இன பாடகர் ஐ மங் பற்றி விவரிக்கும் கட்டுரை இதோ. பார்ப்பதற்கு கருப்பான ஐ மங், உயரமானவர் அல்ல. அவரது நீண்ட தலை முடி, காற்றுடன் பறக்கின்றது. இரு கண்கள் ஒளிவீசுகின்றன. சிறு வயதிலிருந்தே ஐ மங், பாட விரும்பினார். பெரிய மலைகளை நோக்கி செல்லும் மேய்ச்சல் மாடுகளிடையே அவர் பாடினார். 1996ம் ஆண்டு, பெய்சிங் திரைப்படக்கலை கல்லூரியில் சேர்ந்து, குரல் இசையை மேலும் படிக்க நினைத்தார். ஆனால், அவரது விருப்பத்துக்குப்புறம்பாக, நடிப்புக்கலைத் துறையில் சேர்க்கப்பட்டார். இரண்டு ஆண்டு காலம் நடிப்புக்கலை கற்றுக்கொண்ட பின், இதர மாணவர்களைப் போலவே நடிகராக இருக்கவில்லை. மீண்டும் பாடத் துவங்கினார். அவர் ஒரு மிதி வண்டியில் சென்று பெய்சிங் நகரின் பெரிய மற்றும் சிறிய மதுவகங்களில் விருந்தினர்களுக்காகப் பாடுகின்றார். தனது பாட்டுகளை பிறர் கேட்டு மகிழ வேண்டும் என தாம் விரும்புவதாகவும், இறுதியில் தாம் சிறப்பு பாட்டுத் தொகுதியை தயாரிப்பதற்கு துணை புரிய வேண்டும் என நினைப்பதாகவும் ஐ மங் கூறினார்.

"பெய்சிங், ஒரு மாநகரம். பண்பாட்டு வளம் மிக்கது. சாலையில் புதிய விஷயங்களைக் காணலாம். ஆனால், யூனான் மாநிலத்தின் பெரிய மலைகளில் வாழ்ந்தால், ஓராண்டு அல்லது இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே அவற்றை அறிய முடியும். பெய்சிங்கில், பல தேசிய இனங்களின் பண்பாடு உள்ளா! ஒரு தேசிய இனத்தின் பண்பாடு இங்கு அங்கீகரிக்கப்பட்டால், சீனாவின் இதர இடங்களும் இதை ஏற்றுக்கொள்ளும்" என்றார்.

பெய்சிங்கில் குளிர்காலத்தில் மிகவும் கடுமையான குளிர். ஐ மங் மிதி வண்டியில் சாலையில் போகும் போது, அடிக்கடி, கைகால் விறைத்து போகும். ஆனால், வாழ்க்கைத் தேவைக்காகவும், வெவ்வேறான மதுவகங்களும் பாடகருக்கு விடுத்த கோரிக்கைக்கு ஏற்பவும், பாப் இசை குரல், தேசிய இனப்பாணி மற்றும் மேலை நாட்டுப்பாணியில் பாட வேண்டும். ஒருமுறை, அவர் தேசிய இனப் பாணியில் தாம் தயாரித்த ஒரு பாட்டைப் பாடிய போது, பிரபலமான தயாரிப்பாளர் ஒருவர் அப்பாடலைக் கேட்டு ரசித்தார். நீங்கள் வா இன பாடகரின் தனிச்சிறப்பியல்பைக் காட்ட வேண்டும் என்றும், நாட்டுப்புற பாடல்களை இயற்றுவதில் முழுமனதுடன் ஈடுபட்டு, கடந்த காலத்தில் மாட்டு முதுகில் அமர்ந்து பாடும் உணர்வை மீட்க வேண்டும் என்றும் அவர் ஐ மங்கிடம் கூறினார்.

அவரது பேச்சைக் கேட்டு ஐ மங் உற்சாகம் பெற்றார். வா இனத்தவர்களிடையே நீண்டகாலமாக பரவி வரும் நாட்டுப்புறப்பாடல்களை மாற்றியமைத்து இயற்றினார். பின்னர், நவீன அம்சங்களை சேர்த்தார். இதற்கிடையில், நாட்டுப்புறப்பாடலை பாடும் ஐ மங்கிற்கு சாப்பிட பணமில்லாது வாழ்க்கை இன்னலில் சிக்கிக் கொண்டார். அவர் கூறியதாவது: