2008ம் ஆண்டு பெய்சிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது ஏறக்குறைய 4500 ஊக்கமருந்துச் சோதனைகள் நடத்தப்படும். இது 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளின்போது செய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனைகளை விட 25 விழுக்காடு அதிகமாகும். ஊக்கமருந்து பிரச்சனையை எதிர்த்து போரிடும் நடவடிக்கைகளின் அங்கமாக ஊக்கமருந்து சோதனைகளின் அளவை, எண்ணிக்கையை பெய்சிங் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் கமிட்டி அதிகரிக்கவுள்ளதாக அறியப்படுகிறது. 2000ம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போதான ஊக்கமருந்து சோதனைகளின் எண்ணிக்கையைவிட 25 விழுக்காடு அதிகரித்து ஏதென்ஸில் 3500 ஊக்கமருந்து சோதனைகள் நடத்தப்பட்டன. அதேவகையில் 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் போதான ஊக்கமருந்து சோதனைகளிலும் 25 விழுக்காடு அதிகரிப்பு நடைமுரைப்படுத்தப்படும் எனப்படுகிறது.
|