சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் நன்னெறி ஆணையத்தின் தலைவர்
cri
செனகல் நாட்டின் யூசூப்பா நிதியாயே சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் நன்னெறி ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி திங்கள் 12ம் நாள் இவ்வாணயத்தின் தலைவரான 82 வயது கேபா எம்பாயே எனும் மற்றொரு செனகல் நாட்டவர் உயிரழந்ததைத் தொடர்ந்து தற்போது அவரது இடத்தில் யூசூப்பா நிதியாயே நியமனம் செய்யப்பட்டுள்ளார். செனகல் நாட்டின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரான யூசூப்பா நிதியாயே கடந்த 2002ம் ஆண்டு முதல் சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார்.
|
|