2010ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கனடா நாட்டு வான்கூவர் நகரில் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளை நடத்தும் உரிமையை பெற வான்கூவருக்கு போட்டியாக நின்று குறைந்த எண்ணிக்கை வாக்குகளில் கோட்டைவிட்டது தென் கொரியாவின் பியோங்சங் நகரம். 2010ம் ஆண்டுக்கான வாய்ப்பை இழந்தாலும் கஜினி முகமதுவாய் மாறி 2014ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமைக்காக விண்ணப்பித்து அதிக் இறுதிச் சுற்று போட்டியாளர்களாக உள்ள 3 நகரங்களில் ஒன்றாக பியோங்சங் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
தென் கொரியாவின் பியோங்சங்குடன் ரஷ்யாவின் சோச்சி, ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் ஆகிய நகரங்கள் 2014ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமை பெற ஆவலுடன் காத்திருக்கின்றன. இந்நிலையில் இந்த 3 நகரங்களில் வெற்றியாளரை தீர்மானிக்கும் அங்கமாக இந்நகரங்களின் ஏற்பாடுகள், திட்டங்களை பார்வையிட சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் ஆய்வாளர்கள் கடந்த செவ்வாயன்று இம்முன்று நகரங்களுக்கும் பயணாமகியுள்ளனர். இம்மூன்று நகரங்களில் முன்மொழியப்பட்ட போட்டியிடங்கள், வசதிகளை பார்வையிட்டு, தொடர்புடை அதிகாரிகளுடன் சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் ஆய்வாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துவர். வருகின்ற ஜூலை திங்கள் வெற்றி பெறும் நகரம் எது என அறிவிக்கப்படும்.
|