வசந்த விழாவின் அங்கமாக பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தன்னார்வத் தொண்டர்கள் ஒரு வார கால பயிற்சியை கடந்த ஞாயிறன்று முதல் தொடங்கினர். தகவல் அளித்தல், மொழிபெயர்ப்பு மற்றும் அவசர் உதவி அளித்தல் ஆகியவற்றில் ஏறக்குறைய 1600 தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டனர். பெய்சிங் மாநகரைச் சேர்ந்த இந்த 1600 பேர், பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் போது தன்னார்வத் தொண்டுபுரிய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்களாவர். பெய்சிங் மாநகரின் முக்கிய ஓட்டல்கள், சுற்றுலாத் தளங்கள், கடைவீதிகள் மற்றும் வர்த்தகத் தளங்களில் இந்த தன்னார்வத் தொண்டர்கள் கடந்த ஞாயிறு, வசந்த விழா நாள் முதலாக, பயணிகளுக்கு மொழிபெயர்ப்பு, தேவைப்படும் தகவல்களை தெரிவிப்பது உள்ளிட்ட உதவிகளை செய்தனர் என்று பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் தன்னார்வத் தொண்டர்கள் பணி தொடர்பான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
|