• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-13 16:07:12    
சீன தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடர் பற்றி நேயர்கள் கருத்துகள்

cri

சீன தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடர் பற்றி பாண்டிச்சேரி என்.பாலகுமார் தெரிவிக்கும் கருத்துகள் இன்றைய கூட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது. சென்ற ஆண்டில் கல்வி வரி நீக்கம் போன்றவை மூலம் நாட்டின் வலிமை சேர்க்கும் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டது. இந்த ஆண்டில் பொருள் உரிமை பற்றிய வரைவுச் சட்டம், தொழில் நிறுவனங்களின் வருமான வரி பற்றிய வரைவுச் சட்டம், புதிய சீனத் தேசிய மக்கள் பேரவை பிரதிநிதிகளின் எண்ணிக்கை மற்றும் தேர்தல் பிரச்சினை பற்றிய வரைவுத் தீர்மானம் போன்றவை அடங்கும்.


இதில் முதலாவதாக, தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் துணைத் தலைவர் திரு.வாங் சாவ் கோ அவர்கள், இச்சட்ட வரைவு குறித்து விளக்கம் அளித்த போது, சீனாவின் தனிச்சிறப்புடைய சட்ட அமைப்பு முறையில், முதுகெலும்பு பங்காற்றக் கூடிய, இன்றியமையாத முக்கிய சட்டம் இதுவாகும் என்று கூறினார். மேலும், தனியாரின் சட்டபூர்வமான வருமானம், வீடு, அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டுப் பொருட்கள், வங்கிச் சேமிப்பு, முதலீடு, வருவாய் ஆகியவை பாதுகாக்கப்படும். தனியாரின் சட்டப்படியான சொத்துகளை எந்தப் பிரிவும் தனிநபரும் கைப்பற்றவும் கொள்ளையடிக்கவும் சீர்குலைக்கவும் தடை விதிக்கப்படுகின்றது. இந்த விதிகள் வகுக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் பற்றியும் அதன் செல்வாக்கு பற்றியும் விளக்கமாக கூறினார். இதன் மூலம் சீனாவின் தனித்தன்மையை உலகத்திற்கு எடுத்துகாட்டியது போல இருந்தது.


நாட்டின் வருவாய் பெருக்க, புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தவும், சீனாவிலுள்ள உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் மீதான வருமான வரி விகிதத்தைச் சமப்படுத்த இவ்வரைவுச் சட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவும் பயன் அளிக்கக்கூடிய வரைவு சட்டம் இருக்கும் என்பதை நம்புகிறேன். தொழில் துறையில் வேகமாக முன்னோறி வரும் சீனாவில், தொழில் நிறுவனங்கள் மீதான வருமான வரி இன்றியமையாதது. தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் சட்டம் நடைமுறை படுத்தவேண்டும் என்பதை என் விருப்பம்.
சீன மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தவும், முன்னோடியாக விளங்கவும் இதுபோன்ற சட்டங்கள், விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
காங்கேய‌ம் பி.ந‌ந்த‌குமார்
சீன‌ மக்கள் அர‌சியல் க‌ல‌ந்தாய்வு மாநாட்டின் 10வது தேசிய கமிட்டியின் 5வது கூட்டத் தொடர் 3.3.2007 அன்று பெய்ஜிங்கில் தொட‌ங்கியது. இதில் 2100 உறுப்பின‌ர்கள் கூடினார்கள். இந்த மாநாடு மிக விம‌ரிசையாக ந‌டைபெற்றது. இந்த மாநாடு 2007ம் ஆண்டு அறிவியல் பூர்வ‌மான வ‌ள‌ர்ச்சியை மேற்கொள்ளும் என்ற பல த‌க‌வ‌ல்களை அன்றைய செய்திதொகுப்பு வாயிலாய் அறிந்தேன்.
இந்த‌ இரு கூட்டத் தொட‌ர்க‌ளும் வெற்றிக‌ர‌மாக ந‌ட‌ந்து முடிய‌ எனது ந‌ல்வாழ்த்துக்க‌ளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


திருச்சி அண்ணா நகர் வி.தி.இரவிச்சந்திரன் நடைபெற்ற சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத் தொடர் குறித்து.
இந்தாண்டும் சென்ற ஆண்டுபோல் விவசாயிகளின் நலன், வருமானம் ஆகியவற்றில் முக்கியமாக கவனம் செலுத்துவது இடம் பெற்றுள்ளது. இது மெல்ல மெல்லதான் நிறைவேற்றப்பட முடியும். இருப்பினும் விவசாயிகளின் நலன் தொடர்ந்து கருத்தில் கொள்ளப்படுவது ஒவ்வொரு கூட்டத்தொடரும் தெளிவுபடுத்துகிறது. அடுத்ததாக பொருளாதார வளர்ச்சி வேகம் என்பது நடப்பு ஆண்டில் 8 % என்ற இலக்கை சீனா கொண்டுள்ளது. சோசலிசத்தை கடைபிடித்திடுவது என்பது அத்தனை எளிதானதல்ல என்று அரசுத் தலைவர் கூறியுள்ளார். உண்மைதான். ஜனநாயக ஆட்சி என்பது கயிற்றில் நடப்பது போன்றது, கம்யூனிச ஆட்சி என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது. இருப்பினும் இந்த கம்யூனிச ஆட்சி இல்லையென்றால், ஒருங்கிணைந்த சீனாவை வரைபடத்தில் பார்த்திருக்க முடியாது.
அடுத்து பணவீக்கம் என்பது, என்னைப் பொருத்தவரை சீனாவிற்கு மிகவும் எளிதாக கையாளக் கூடிய விடயம். இதனை கட்டுப்படுத்துவது மிக மிக சுலபமாக சீனா செய்து முடித்திடும்.காரணம் நுகர்வு அதிகமாவது. விலைவாசி என்பது தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருப்பதுமே. விடயம் தெரிந்தவர்களுக்கு தெளிவாக புரிய வைக்கும். இணக்க சமூகத்தை முழுமையாக உருவாக்கிடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கனவும் நனவாகிடும் தூரம் அதிகமில்லை என்பது என் கணிப்பு.இலக்கு ஒன்றே இலட்சியமாக இருக்கும் வரை அந்த இலக்கு வெகுவிரைவில் எட்டிப்பிடிக்கப்படும்.