உள் மங்கோலியாவில் மூன்று தேசிய இனங்களின் வளர்ச்சியை ஆதரிப்பது
cri
வட சீனாவின் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில், குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இன மக்களின் வாழ்க்கை மேலும் வசதி பெறும் பொருட்டு, இத்தேசிய இனங்கள் குழுமி வாழும் பிரதேசங்களின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கென, 2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை, 170 கோடி யுவான் மதிப்புள்ள நிதியை உள் மங்கோலியத் தன்னாட்சி பிரதேசம் ஒதுக்கீடு செய்யும். இத்தன்னாட்சிப் பிரதேசத்தில், Elunchun, Owenke, ரஷியா உள்ளிட்ட குறைவான மக்கள் தொகையுடைய மூன்று தேசிய இனங்கள் உள்ளன. இவ்வினங்களின் மக்கள் கொகை, ஒரு லட்சத்துக்குள் உள்ளது. இத்தன்னாட்சிப் பிரதேசத்தின் தேசிய விவகாரக் கமிட்டியின் பொறுப்பாளர் ஒருவர் பேசுகையில், இப்பிரதேசங்களில் நெடுஞ்சாலைகளையும், நீர் சேமிப்பு வசதிகளையும் கட்டியமைத்து, ஒதுக்குப்புறப் பிரதேசங்களில் மின்சாரப் பயன்பாட்டுப் பிரச்சினையைத் தீர்த்து, உள்ளூர் கல்விக்கான அடிப்படை வசதிகளையும், மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளையும் மேம்படுத்துவதற்கென இந்நிதி முக்கியமாக பயன்படுத்தப்படும் என்றார்.
|
|